தமி­ழ­கத்­தில் தீபா­வளி அன்று பட்­டாசு வெடிக்க கட்­டுப்­பா­டு­கள் அறி­விப்பு!

சென்னைஅக்,21: நாடு முழுவதும் வரும் அக்­டோ­பர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்­டா­டப்­படுகிறது.பொது மக்­கள் தீபா­வளி பண்டி­கையை பாது­காப்­பாக கொண்­டா­டும் வகை­யில் அரசு தரப்பில் கட்­டுப்­பா­டுகள் விதிப்­பது வழக்­கம்.இந்­நி­லை­யில், இந்த ஆண்டும் தமிழ்­நாடு மாசு கட்­டுப்­பாட்டு வாரி­யம் பட்­டாசு வெடிக்க கட்­டுப்­பா­டுகளைஅறி­வித்துள்­ளது. தீபாவளி பண்டிகை அன்று இரண்டு மணிநேரம் பட்­டாசு வெடிக்க தமிழ்­நாடு மாசு கட்­டுப்­பாட்டு வாரியம் அனு­மதி வழங்­கியுள்­ளது.மணி அதன் படி , காலை  6 – 7 மணி மற்றும் இரவு 7 – 8 வரை, குறைந்தஒலி, பட்­டாசு மாசு ஏற்­படுத்தும் பட்­டாசுகளை வெடிக்­கலாம் என அறிவிக்­கப்பட்டுள்­ளது.பொது ­மக்­கள் குறைந்த ஒலியு­ட­னும்,குறைந்த அள­வில் காற்றுயும் மாசு­படுத்தும் தன்­மை கொண்ட  பசுமை பட்­டா­சுகளை மட்­டுமே வெடிக்க பொது­ மக்­கள் வேண்டும். திறந்த வெளியில் கூட்டா  ஒன்று கூடி   பட்­டா­சுகளை வெடிப்­ப­தற்கு மாவட்டநிர்­வா­கம்/ உள்­ளாட்சி அமைப்புகளின் முன் அனு­ம­தியு­டன், அந்­தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்­கங்­கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும் மருத்துவமனைகள் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பட்ட கூடிய இடங்களுக்கு அருகில் பட் டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அறிவிக்கப் பட்டுள்ளன.