பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 21 பேர் உயிரிழப்பு

முசாபராபாத்: பாகிஸ்தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் மக்​கள் அரசுக்கு எதி​ராக போராட்​டங்​களில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். அவர்​களை…

மொராக்கோவில் இரண்டு கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 19 பேர் பலி; மீட்பு பணிகள் தீவிரம்

மொராக்கோவில் இரண்டு கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் பத்தொன்பது பேர் பலி ; மீட்பு பணிகள் தீவிரம் ரபாடா : மொராக்கோவில் இரண்டு கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் பத்தொன்பது பேர் உயிரிழந்தனர் . மீட்புப் பணிகள் தொடர்கின்றன. வடஆப்ரிக்க நாடான மொராக்கோவில் நான்கு மாடி குடியிருப்பு கட்டடங்கள் இரண்டு இடிந்து விழுந்தது . தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர் . இடிபாடுகளுக்கு மத்தியில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கினர் . இந்த விபத்தில் பத்தொன்பது பேர் உயிரிழந்தனர் . மேலும் பதினாறு பேர் பலத்த காயமடைந்தனர் . இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது . இடிந்து விழுந்த இரண்டு கட்டடங்களில் எட்டு குடும்பங்கள் வசித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது . கட்டடம் இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி பத்தொன்பது பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . 

வெறிநாய்கள் கடிப்பதால் பரவும் ரேபிஸ் நோய் பாதிப்புகளால் ஆண்டுக்கு 60 ஆயிரம் உயிரிழப்பு: செல்ல பிராணிகளிடம் கவனம் அவசியம்

உலக ரேபிஸ் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 28ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதை…

டீசல் டேங்கர் மீது பஸ் மோதி கோர விபத்து 45 இந்திய யாத்ரீகர்கள் பலி: மெக்காவில் இருந்து மதீனா சென்ற போது சோகம்

ஜெட்டா: சவூதி அரேபியாவில் நடந்த பேருந்து விபத்தில் 45 இந்திய யாத்ரீகர்கள் பலியானார்கள்.…