2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 75,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!

சென்னை: இந்தியநாட்டின் 78வது சுதந்திதினம் கொண்டாப்படுவதை ஒட்டி, சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றி வைத்­தார். அதன் பின்­னர்அவர் ஆற்றிய சுதந்திரதின உரை­யில், விடுத­லை­யைப் பாடு­பட்டு பெற்றுக்கொடுத்த தியாகிகளைப் போற்றுவோம்.

அவர்­களின் குடும்பத்தின­ருக்கு நன்­றி­யைத் தெரிவிப்­போம்.எந்த நோக்­கத்­துக்­காக அவர்­கள் போராடி­னார்­களோ,

அந்த நோக்­கம் நிறை­வேற எந்­நா­ளும் உழைப்­போம் என்று இந்­நா­ளில் உறுதி ஏற்­போம்.வளர்ச்சி என்­பது
பொருளாதார வளர்ச்­சி­யாக மட்டு­மல்ல, சமூகவளர்ச்­சியாக இருக்கவேண்­டும். பொருளா­தாரம், கல்வி,சமூ­கம்,

சிந்­தனை, செயல்­பாடு ஆகிய ஐந்தும் ஒரு ­சேரவளர வேண்­டும். அது­தான் பெரியாரும், அண்­ணாவும், கருணாநிதியும் காண விரும்பிய திரா­விட மாடல் வளர்ச்சி.கடந்த மூன்­றாண்டு காலத்­தில் தமிழ்­நாடுஅடைந்த வளர்ச்­சியை நீங்­கள் பார்த்­தால், அதுஒரே ஒரு துறை வளர்ச்­சியாக இல்­லா­மல் பல்­துறை வளர்ச்­சியாக அமைந்திருக்கும். அந்தவகை­யில், மக­ளிர் முன்­னேற்­றத்­துக்­கான திட்­டங்­கள், காலை உணவுத்திட்­டம், மக்­க­ளைத் தேடி மருத்­துவம், இன்­னுயிர்காப்­போம் – நம்­மைக்காக்கும் 48 திட்­டம், நான்முதல்­வன்திட்­டம் , தமிழ்ப்புதல்­வன்

திட்­டம் எனபல்­வேறு திட்­டங்­கள் செயல்­படுத்­தப்­படுகின்­றன.நமது மாணவர்­கள் அனை­வரும் தங்­கள்கல்வித் தகுதிக்­கேற்ப நல்­வே­லை­ வாய்ப்­பு­க­ளைப் பெற்று, வறுமை இல்­லாத, சமத்­துவம் வாய்ந்த, ஓர் அறிவார்ந்த
தமிழ்ச் சமுதாயத்தை உருவாக்க வேண்­டும்.உலக அளவில் முன்­னணி மாநில­மாக தமிழ்­நாடு விளங்கவேண்­டும். மத்­திய அரசின் தரவு­க­ளின்­படிவெளியான ஒரு புள்ளி­விவரத்­தில், கடந்தமூன்று ஆண்­டு­க­ளில் அமைப்பு சார்ந்த தனி­யார் துறை­க­ளில் 77 லட்­சத்து 79 ஆயிரம் புதியவேலைவா­ய்ப்­பு­கள் திராவிட மாடல் அர­சால் உருவாக்­கப்­பட்டுள்­ளது என்று தெரிவிக்­கப்­பட்­டுள்­ளது.இத­னைத் தவிர்த்து,இந்த அரசு பொறுப்­பேற்ற கடந்த மூன்று
ஆண்­டு­க­ளில், தமிழ்­நாடு அரசுப்பணியாளர் தேர்வா­­ணை­யம் ,சீரு­டைப்பணியாளர் தேர்வு வாரியம், மருத்­
துவப்பணியாளர் தேர்வுவாரியம், ஆசிரியர்தேர்வு வாரியம் ஆகியதேர்வு வாரியங்­கள் மூல­மாக 32 ஆயிரத்து 774 நபர்­க­ளுக்குப் பல்­வேறு அரசுத்துறை­க­ளில் நேரடிப்பணி நிய­ம­னங்­கள்வழங்­கப்­பட்டுள்­ளன.மேலும், உள்­ளாட்சி
அமைப்­பு­கள், அரசுத்துறை நிறுவ­னங்­கள் போன்ற பல்­வேறு அரசுஅமைப்­பு­க­ளில் 32 ஆயி­ரத்து 709 இளை­ஞர்­கள்
பணிநிய­ம­னம் பெற்று,கடந்த மூன்று ஆண்­டு­களில் மொத்­தம் 65 ஆயி­ரத்து 483 இளை­ஞர்­களுக்கு அரசுப் பணி
நிய­ம­னம் வழங்­கப்­பட்­டுள்­ளது.இது­மட்டும் அல்­லாது,வரும் 2026ஆம் ஆண்டுஜன­வரி மாதத்­திற்குள் 75ஆயிரத்துக்கும் மேற்­பட்ட அரசுப்பணியி­டங்கள் நிரப்­பப்­படும் என பேசி­னார்.