கோவை. ஆக.11 தமிழ்ப் பு த ல்வன் திட்டம் மிகவும் நல்லதிட்டம்.
இந்த பணத்தை வைத்து மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு
பயன்படுத்தாமல் இருந்தால் சிறப்பான திட்டமாக இருக்கும்
என கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர்
வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
நேற்று கோவை அரசுகல்லூரியில் தமிழ்ப்புதல்வன் திட்டம்
தொடக்க விழா நடைபெற்றது. தொடக்கவிழாவில்
தமிழக முதலமைச்சர் மு.கஸ்டாலின் கலந்துகொண்டு திட்டத்தை
தொடங்கி வைத்தார்.அந்த நிகழ்ச்சியில்கோவை தெற்கு தொகுதி
பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன் தெரிவித்ததாவது, தமிழ்ப்புதல்வன்
திட்டம் தொடக்கநிகழ்ச்சியில் பங்கேற்றத்திற்காக முதலமைச்சர் ஸ்டாலின்
என்னிடம் நன்றி தெரிவித்தார்.கோவை விமான நிலையம் மற்றும் எனது
தொகுதிக்குட்பட்டடவுன் ஹால், காந்திபுரம் பகுதியில் மல்டிலெவல் கார்
பார்க்கிங்கொண்டுவரவேண்டும்.அதுமட் டுமில்லாமல், தொகுதி சார்ந்த
உள்கட்டமைப்பு பிரச்சனைகள் மற்றும்விமான நிலையம் விரிவாக்கம்
தொடர்பாக பேசுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலினிடம் சந்திக்க நேரம்
ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன்.அவர்களும் வந்து
பாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.வருகின்ற 18ஆம்தேதி மறைந்த
முன்னாள் முதலமைச்சர்கருணாநிதி உருவம்பொறித்த 100 ரூபாய்
நாணயம் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின்
அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்ப் பு த ல்வன்திட்டம் மிகவும் நல்லதிட்டம். இந்தபணத்தை வைத்து
மாணவர்கள் போதைபழக்கத்திற்கு பயன்படுத்தாமல் இருந்தால்மிகவும்
சிறப்பான திட்டமாக இருக்கும் எனவானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.






