புதிய சட்டங்களின் நோக்கம் பெண்கள், குழந்தைகளை பாதுகாப்பதே; பிரதமர் மோடி திட்டவட்டம்

புதுடில்லி,செப்.1 உச்­ச­நீதிமன்­றம் ஜனநாயகத்­தின் தாய். தேசநலனுக்­காக நீதிமன்­றங்­கள் செயல்­ படுகி­றது’ என பிரதமர் மோடி பெருமிதம் தெரி­வித்­தார். டில்லியில் நீதித்­து­றைக்­கான தேசிய மாநாடு இரண்டு நாட்­கள் நடை­ பெ­றுகி­றது. மாநாட்டை இன்று (ஆகஸ்ட் 31) பிர­தமர் மோடி துவக்கி வைத்­தார். உச்­ச­நீதி­ மன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், கபில் சிபல் உள்­ளிட்­டோர் பங்­கேற்­ற­னர். மாநாட்­டில் பிரத­மர் மோடி பேசியதாவது:  நீதிமன்­றங்­கள் தேச நல­னுக்­காக செயல்­பட்டு வருகி­றது. நீதித்­துறை மற்றும் உச்­ச­நீதிமன்­றம் மீது மக்­கள் அதிக நம்­ பிக்கை வைத்­துள்­ள­னர். இந்தியர்­கள் ஒருபோதும் நீதித்­துறை மீதோ, நீதிமன்­றங்­கள் மீதோ சந்­தே­கம் எழுப்­பிய­ தில்லை. சுப்­ரீம் கோர்ட்­டின் 75 ஆண்­டுகள் என்­பது ஒரு நிறுவ­னத்­தின் பய­ணம் அல்ல; இந்திய அரசிய­ ல­மைப்பு மற்றும் மதிப்பின் பய­ணம். உச்­ச­நீதி­ மன்­றம் ஜன­நாயகத்­தின் தாய். இந்தியாவின் பெரு­மையை மேலும் உயர்த்­துகி­றது. நெருக்­கடி நிலை­யின் இருண்ட காலத்­திலும் உச்ச நீதி­ மன்­றம் எங்­கள் அடிப்படை உரி­மை­களை உறுதி செய்­தது. எப்­போ­தும் தேசிய ஒ ரு­மைப்­பாட்­­டைப்    பாதுகாத்­­தது . நீதித்­து­றை­யில் மாவட்ட நீதித்­துறை என்­பது முக்­கியமான தூணாக விளங்­குகி­றது. நமது குற்­ற­வியல் சட்­டங்­கள் காலனித்­துவ சிந்­த­னையி லிருந்து விடுவிக்க வழி­ வகை செய்­தது. புதிய சட்­டங்­கள் மக்­க­ளுக்கு மிகுந்த பாதுகாப்பு அளிக்கும். ரூ.8 ஆயிரம் கோடி மாவட்ட நீதிமன்­றங்­க­ளில் நிலுவை­யில் உள்ள 4.5 கோடி வழக்குகளை தீர்க்க வழிவகை ஆராயப்­ப­டு­ கி­றது. 10 ஆண்­டுகளில் நீதித்­து­றை­யின் உள்­கட்ட­மைப்பை மேம்­ப­டுத்த அரசு ரூ.8 ஆயிரம் கோடி செலவிட்­டுள்­ளது. புதிய கிரிமி­னல் சட்­டங்­கள் குடிமக்­கள், நீதித்­து­றை க்கு முன்னுரிமை தரும் வகை­யில் உருவாக்­கப்பட்­டுள்­ளது.பெண்கள்,குழந்­தை­களை மைய­ மாக கொண்டு புதிய சட்டங்­கள் உருவாக்­கப்­பட்டுள்­ளது. பெண்­க­ளுக்கு எதிரான வன்­கொ­டு­ மை­கள் சமூகத்­திற்கு மிகவும் கவ­லை­யளிப்­பவை­யாக உள்­ளன.இவ்­வாறு பிரதமர் பேசி­னார்.