தேசிய கீதம் எழுதப்பட்ட மொழிக்கே அவமானம்- மத்திய அரசுக்கு முதல்வர் கண்டனம்!

சென்னை ஆக.5கடந்த சில நாட்­களுக்கு முன்பு டெல்லியில் வங்­க­தேசத்தை சேர்ந்த 8பேரை போலீ­சார் கைது செய்­த­னர்.இது தொடர்­பாக டில்லியில் வசிக்கும் மேற்கு வங்கத் தை சேர்ந்த ஓய்வு பெற்ற அதி­காரி­களுக்கு டில்லி போலீசார் கடிதம் ஒன்றை எழுதி உள்­ள­னர்.அதில். கைது செய்யப்­பட்­ட­வர்­களிடம் இருந்து மொழி பெ­யர்க்க வங்­க­தேச மொழியில் புலமை பெற்­ற­வர­கள்
தேவை” என கூறியிருந்­த­னர். அதில், டெல்லி போலீ­சார் வங்­காள மொழி என்று குறிப்பி­டாமல் வங்­க ­தேசமொழி என குறிப்பிட்டுள்­ளது சர்ச்சையை ஏற்­படுத்தியுள்­ளது. இதற்கு வங்­க­தேச முதலமைச்­சர் மமதா பேனர்ஜி கடும் கண்ட­னம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டு ள்ள எக்ஸ் பதிவில், “மத்திய உள்துறை அமைச்­ச­கத்தின் நேரடி கட்டுப்­பாட்டில் உள்ள டெல்லி போலீ­சார் வங்­காள மொழியை வங்­கதேச மொழி எனகுறிப்பிட்டுள்­ள­னர்.வங்­காள மொழிஎங்­கள் தாய்­மொழி. ரபிந்திரநாத்தாகூர்.சுவாமி விவே­க னந்­தர் ஆகி­யோ­ரின் மொழி. தேசியகீதம், பங்­கிம் சந்திரசட்­டர்ஜி எழுதிய தேசிய பாடல் ஆகியவை எழுதப்­பட்ட மொழி.வங­காள மொழியை வங்­கதேச மொழியாக குறிப்பிடுவது தேசவிரோ­தமான அரசியல­மைப்புக்கு எதிரா­னது. இது இந்தியா முழுவதும் வங்காள மொழி பேசும் மக்­களுக்கு ஏற்பட்ட அவமானம் ஆகும். இந்தியாவின் வங்­காள மொழி பேசும் மக்களை அவமதிக்­கவும், அவமா­னப்­படுத்­த­வும் இது ­போன்ற அரசியல­மைப்பு விரோத மொழியை பயன்­படுத்தும் வங்­காள எதிர்ப்பு இந்திய அரசுக்கு எதிராக வலி­மை­யான எதிர்ப்பை பதிவு செய்கி­றேன்” என்று பதித்துள்­ளார். இந் நி­லை­யில், மம்தாபானர்­ஜியின் கண்­டன பதிவுக்கு தமிழ்­நாடு முதலமைச்­சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித் துள்­ளார்.இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “மத்திய உள்துறை அமைச்­ச­கத்தின் கீழ் உள்ள டெல்லி காவல்துறை, வங்­காள மொழியை” வங்­கதேசமொழி” என்று குறிப்பிட் டுள்­ளது. இது நமது தேசியகீதம் எழுதப்­பட்ட மொழிக்கே அவமானம் ஏற்­படுத்துவதாகும்.இது ­போனற அறிக்­கை­கள் தற்­செயலான பிழை­கள் அல்­லது தவறுகள் அல்ல.பன்­மு­கத்தன­மையை தொடர்ந்து குறை மதிப்பிற்கு உட்­படுத்தும் ஒரு ஆட்சியின் இருண்டமன ­நிலையை அவை அம்ப­லப ­படுத்துகின்­றன. இந்தி அல்­லாத மொழி­கள் மீதான இந்த தாக்­குதலை எதிர­ கொள்ளும் போது. மேற்கு வங்காள மொழிக்­கும் மக்­களுக்­கும் மம்தாபானர்ஜி ஒரு கேடயமாக நிற்கி­றார்.இதற்கு சரியான பதிலடி கொடுக்­கா­மல் இந்த தாக்­குத்தலை அவர் கடந்து செல்லவிடமாட்­டார் என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.