அகமதாபாத் விமான விபத்து நடந்த பகுதியில் பிரதமர் மோடி ஆய்வு விபத்துகுறித்த ஆய்வுக் கூட்டத்திற்குதலைமைதாங்கினார்!

அகமதாபாத்:அக­ம­தா­பாத் விமான விபத்­துப் பகு­தியை பிர­தமர் நரேந்­திர மோடி நேற்று (ஜூன் 13) காலை நேரில் ஆய்வு செய்­தார்.தொடர்ந்துஅவர்விமான விபத்­தில் காய­ம­டைந்­தவர்­களை நேரில் சந்­தித்து ஆறு­தல் கூறி­யதோடு,குஜ­ராத் முன்­னாள் முதல்­வர் விஜய் ரூபா­னி­யின்
குடும்­பத்­தி­னரை நேரில் சந்­தித்து ஆறு­தல் தெரி­வித்­தார்.முன்­ன­தாக, நேற்று முன்­தி­னம் (ஜூன் 12)
குஜ­ராத்­தின்அக­ம­தா­பாத்­தில் இருந்து 242 பேரு­டன் லண்­டன் சென்ற ஏர் இந்­தியாவிமா­னம்,புறப்­பட்ட சில நிமி­டங்­க­ளில் கீழே விழுந்து நொறுங்கி தீப்­பி­டித்­தது. இந்த பயங்கர விபத்­தில் குஜ­ராத்
முன்­னாள் முதல்­வர்விஜய் ரூபானி உட்­பட விமா­னத்­தில் சென்ற 241பேர் உயி­ரி­ழந்­த­னர்.
தரை­யில்விழுந்த விமா­னம், மருத்­து­வக் கல்­லூரி விடு­தி­யில் மோதி­ய­தில்,மருத்­துவ மாண­வர்­கள்
10 பேர் இந்த விபத்­தில் பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­தனர். கல்­லூரி மாண­வர்­கள் சிலர் காய­ம­டைந்து
சிகிச்­சை க்­காக மருத்­து­வ­ ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர்.இதற்­கி­டை­யில், விமா­னத்­தில் பய­ணம் செய்த 242 பேரில் உயிர் பிழைத்த பயணி விஷ்­வாஸ் குமாரை பிர­த­மர்  நரேந்­திர மோடி சிவில் ம ரு த் ­து ­வ ­ம ­னை ­யி ல் நேரில் சந்­தித்து ஆறு­தல் கூறி­னார்.
விமான விபத்­தில் உயிர் பிழைத்த விஷ்­வாஸ் குமார் ரமேஷ் அளித்­தப் பேட்­டி­யில்,‘‘கண்­மூடி திறப்­ப­தற்­குள் எல்­லாம் முடிந்­து­விட்டது. எப்­படி உயிர் பிழைத்­தேன் என்­பது தெரி­ய­வில்லை. மீட்புபடை வீரர்­கள் என்னை மீட்டு மருத்­து­வ­ம­னையில் சேர்த்­த­னர்’’ என்று கூறி­யி­ருந்­தார். இவர்,டையூ பகு­தியை பூர்­வீ­கமா­கக் கொண்­ட­வர். 20ஆண்­டு­க­ளாக குடும்­ப த்­து­டன் லண்­ட­னில் வசிக்­கி­றார். அந்­நாட்டு குடி­யு­ரிமை பெற்­றுள்­ளார்.விமா­னத்­தின் 11ஏ இருக்­கை­யில் பய­ணம் செய்­துள்­ளார். நேற்று விபத்து நடந்த பின்­னர், அவர் நடந்து வந்த காட்சி இணையத்­தில்பரவிவரு­கி­றது. அந்த வீடி­யோ­வில்,  சற்று பதற்­ற­மான நிலை­யில் இருந்­தா­லும்,மிக சாதா­ரண விபத்­தில்சிக்­கி­ய வரை போல
வெகு இயல்­பாக அவர்நடந்து செல்­வது பதி­வா­கி­யி­ருந்­தது. காலில் லேசாக அடி­பட்­டி­ருந்­ததால், சற்று தாங்­கி­ய­படி சென்­றார். அவர் நடந்து சென்ற காட்சி, வலை­த­ளங்­க­ளில் வைர­லா­னது
குறிப்­பி­டத்­த க்­கது. நிவா­ரண மற்­றும் மீட்பு நட­வடிக்­கை­கள் குறித்து மதிப்­பீடு செய்ய அக­ம­தா­பாத் விமான நிலை­ய த்­தில் உயர்­நிலை அதி­கா­ரி­க­ளு­ ட­னான ஆய்வு கூட்­ட த்­திற்­கும் பிர­த­மர் தலைமை தாங்­கி­னார்.