காட்டுமன்னார்கோயில் அருகே ஆபத்தை உணராமல் உடைந்த பாலத்தைக் கடக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள மாதர் சூடாமணி ஊராட்சிக்கு
அடங்கிய
கூத்தூர் கிராம் உள்ளது இந்த ஊராட்சியில் சுமார் 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள
மேலும் உடையூர் ஊராட்சிக்கு செல்ல
திருநாரையூரான் வாய்க்காலில் இருந்து உடையூருக்கும் மாதர் சூடாமணிக்கும் குறுகிய இணைப்பு பாலம் பல ஆண்டுகாலமாக இருந்து வருகிறது
இந்தப் பாலம் இங்குள்ள விவசாயத்திற்கும் அங்குள்ள பள்ளி மாணவர்களும் சென்று வருகின்றனர் இந்த நிலையில்
அங்குள்ள கிராம பொதுமக்கள் பாதுகாப்பிற்காக பாலத்தின் சைடில் கயிறு கட்டி சென்று வந்தனர்
தற்பொழுது பெய்து வரும் பருவ மழை காரணமாக அங்குள்ள கழிகள் தண்ணீரில் அடித்து சென்றது
இதனால் ஆபத்தை உணராமல் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் குழந்தைகள் அந்தப் பாலத்தை கடந்து செல்கின்றனர் மேலும் இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் பாலம் அமைத்து தர அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்






