சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நேர்விவாதிக்க தயார், என்று துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் கூறியுள்ளார்.ரூ.15 கோடி மதிப்பில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘மாவட்ட விளையாட்டு வளாகம்’ அமைத்திடவும், மதுரை மாவட்டவிளையாட்டு வளாகத்தில் ரூ.6 கோடி மதிப்பில்‘ஒலிம்பிக்அகாடமி’தொடங்கவும் சென்னையில் நேற்று (நவ.11)நடைபெற்ற அரசு விழாவில் காணெளி வாயிலாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.பின்னர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம்,யாருடைய ஆட்சிக் காலத்தில் மக்கள் நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டன என்பது குறித்து நேருக்கு நேர் விவாதிக்கதயாரா? என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வருக்கு கேள்வி எழுப்பியிருப்பது தொடர்பாக கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,“என்னை கூப்பிட்டால் நான் செல்வேன்.” என்றார்.தொடர்ந்து பல திட்டங்களுக்கு கருணாநிதி பெயர்சூட்டப்படுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டுவது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு,“வேறுயார் பெயரை வைக்கலாம்?என்று விமர்சனம் வரத்தான் செய்யும். யார்பெயரை வைக்க வேண்டுமோ, அவர் பெயரைத்தான் வைக்க வேண்டும். கூறினார்.
‘இபிஎஸ் உடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார்’: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்






