லட்சக்கணக்கான பக்தர்களின் ‘வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா’…. கோஷம் விண்ணதிர… திருச்செந்தூரில் நடந்த சூரசம்ஹாரம்… ஆணவ மாயையை அழித்து ஆட்கொண்ட முருகன்.

திருச்செந்­தூர், நவ.08 முரு­கப் பெ­ரு­மானின் அறு­படை வீடு­க­ளில் 2ம் படை­ வீ­டாக திக­ழும் திருச்­செந்­தூர் சுப்­பி­ர­ம­ணிய சுவாமி கோவி­லில்ஆண்­டு­ தோ­றும் நடை­பெ­றும் திரு­வி­ழாக்­க­ளில் மிக­வும் சிறப்பு வாய்ந்­ததாக கரு­தப்­ப­டு­வது கந்­தசஷ்டி திரு­வி­ழா­வா­கும்.அந்தவகை­யில், இந்த ஆண்­டுக்­கான கந்­தசஷ்டி திரு­விழா கடந்த 2ந்தேதி யாக­சாலை பூஜை­யு­டன் தொடங்­கி­யது.அன்று முதல் கோவி­லில் உள்ள தற்­கா­லிக கொட்­டகை­க­ளில் பக்தர்­கள் விர­தம் இருந்துவந்­த­னர்.விழா நாட்­க­ளில் தின­மும் அதி­காலை நடை திறக்­கப்­பட்டு, விஸ்­வரூப தீபா­ரா­தனை, உதய­மார்த்­தாண்ட அபி­ஷே­கம், ஜெயந்­தி­நா­தர் யாக­சாலை புறப்­பாடு,மூல­வர், சண்­மு­க­ருக்கு உச்­சி­கால பூஜை, யாக­சா­லை­யில் உள்ளசுவாமி ஜெயந்­தி­நா­தருக்கு தீபா­ரா­தனை,பின்­னர் தங்­கச்­சப்­ப­ரத்தில் சுவாமி எழுந்­த­ரு­ளல்,மாலை­யில் சுவாமி,வள்­ளிதெய்வானை அம்­பாள்­க­ளு­டன் திரு­வா­வடு­ ­துறை ஆதீ­னம் கந்­தசஷ்டி மண்­டபத்­துக்கு எழுந்­த­ரு­ளும் நிகழ்ச்­சி­கள் நடந்­தது. மேலும் சுவாமி ­அம்­பாள்­க­ளு­டன் அலங்­க­ரிக்­கப்­ பட்டதங்க ரதத்­தில் கிரி­ வீதிஉலா வந்து பக்­தர்­களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடை­பெற்­றது.சிகர நிகழ்­வான சூர­சம்­ஹா­ரம் திரு­வி­ழா­வின் சிகர நிகழ்ச்­சி­யான சூர­சம்­ஹா­ரம் நேற்று மாலை(7-ந்தேதி) கோவில் கடற்­கரை­யில் கோலா­க­ல­மாக தொடங்கி நடை­பெற்­றது.முரு­கப் பெரு­மா­னான சுவாமி ஜெயந்­தி­நா­தர்,சூரனை வதம் செய்­வதற்­காக வென்­பட்டு உடுத்தி, வெட்­டி­ வேர்மயில் தோகை மாலை அணிந்து கடற்­கரைக்கு வருகை தந்­தார். முத­லில் மாயையே உரு­வாக கொண்ட யானை­மு­கம் கொண்டதார­கா­ சூ­ரன் தனது பரி­வா­ரங்­க­ளு­டன் முரு­க­பெ­ரு­மா­னி­டம் போரி­டு­வ­தற்­காக,அவரை மூன்­று­ முறை சுற்றிவந்து சுவா­மிக்கு எதி­ராக நின்­றான். 4.54ம ணிக்கு முரு­க­பெ­ரு­மான் வேல் கொண்டு தார­கா­சூ­ரனை வதம் செய்­தார்  அதன்­பி­றகு கன்­மமே உரு­வாக கொண்ட சிங்­க­ மு­கா­சூ­ரன்,முரு­க­பெ­ரு­மானை வல­மி­ருந்து இட­மாக மூன்­று ­முறை சுற்றி வந்து, நேருக்கு நேர்போரிட தயா­ரா­னான்.5.09மணிக்கு சிங்­க­மு­கா­சூ­ர­னை­யும் முரு­க ­பெ­ரு­மான் வேலால் சம்­ஹா­ரம் செய்­தார்.தொடர்ந்து சூர­பத்­மன் தனது படை­வீ­ரர்­க­ளு­டன் வேக­மாக முரு­க­பெ­ரு­மா­னு­டன் போர் புரிய வந்­தான்.தொடர்ந்து 5.22 மணிக்கு முருக பெரு­மான் வேல் எடுத்து சூர­பத்­மனை அழித்­தார்..இறு­தி­யாக மாம­ர­மும்,சேவ­லு­மாக உரு­மாறி வந்தசூர­பத்­மனை முரு­க­பெ­ரு­மான் சேவ­லும்,மயி­லு­மாக மாற்றிஆட்கொண்­டார் .சேவலை தனது கொடி­யா­க­வும்,மயிலை வாக­ன­மா­க­வும் வைத்து கொண்­டார்.கடற்­கரை­யில் குவிந்­துள்ள லட்­சக்­க­ணக்கான பக்­தர்­கள் சூர­சம்­ஹா­ரத்தை காண உள்­ளூர், வெளி­யூர், வெளி­மா­நி­லம்,வெளி­நா­டு­க­ளில் இருந்­தும் லட்­சக்­க­ணக்­கானபக்­தர்­கள் கோவி­லில் குவிந்­துள்­ள­னர். கந்தசஷ்டிவிழாவை யொட்டி ,விர­தம் இருந்த பக்­தர்­கள், திருச்­செந்­தூ­ரில் தங்­களது விர­தத்தை நிறை­வு­ செய்­த­னர். சூர­சம்ஹாரம் நிகழ்ந்­த போது கூடி­யி­ருந்த லட்­சக்­க­ணக்­கான பக்­தர்­கள் ‘வெற்­றி­வேல் முரு­க­னுக்கு அரோ­கரா, கந்­த­னுக்கு அரோ­கரா’ போன்றபக்தி கோஷங்­களை விண்­ண­திர முழங்கிசாமி தரி­ச­னம் செய்­தனர். பக்­தர்­க­ளின் பாது­காப்பு கருதி,கடற்­கரையில் கம்பு மற்­றும் கம்­பி­க­ளால் தடுப்புவேலி அமைக்­கப்பட்டு இருக்­கி­றது.4,500க்கும் மேற்­பட்ட போலீ­சார் பாது­காப்புப் பணி­யில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.திருக்­கல்­யா­ணம்..7ம்திரு­நா­ளான இன்று(வெள்­ளிக்­கி­ழமை) அதி­காலை 3மணிக்கு நடை திறக்கப்­பட்டு, 3.30மணிக்கு விஸ்­வ­ரூப தீபா­ரா­தனை­யும்,4மணிக்கு உதய மார்த் தாண்ட அபி­ஷே­க­மும் நடக்­கி­றது. 5.3 மணிஅள­வில் தெய்­வானை அம்­பாள் தபசு காட்சிக்கு புறப்­ப­டு­கி­றார்.காலை 9 மணிக்கு உச்சி­கால அபி­ஷே­கம்,மதி­யம் 1 மணிக்கு சாய­ரட்சை தீபா­ரா­தனை, மாலை 6 மணிக்கு அம்­பா­ளுக்கு சுவாமிகாட்சி கொடுக்­கி­றார். பின்­னர் மாலை ­மாற்­று­தல் நிகழ்ச்சி நடக்­கி­றது.இரவு சுவா­மிக்­கும்,தெய்­வானை அம்­பாளுக்­கும் திருக்­கல்­யா­ணம் நடை­பெ­று­கி­றது.