மாநிலங்­கள் உருவான தினம்- ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து.

புது­டெல்லி, நவ. 2 கடந்த 1956-ம் ஆண்டுநவம்­பர் 1-ந்தேதி ஆந்திரபிர­தே­சம், மத்திய பிர­தேசம், கர்­நா­டகா, கேரளா,தமிழ்­நாடு மற்றும் லட்­சத்தீவுகள் ஆகியவை மொழிவாரி மாநிலங்­களாக பிரிக்­கப்­பட்­டன.பஞ்­சாப் மற்றும் அரியானா 1966-ல் பிரிக்கப்­பட்­டது.சத்தீஸ்கார் 2000-வது ஆண்டில் மத்திய பிரதே­சத்திலிருந்து பிரிக்கப்­பட்­டது.­ இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் தங்களது மாநிலம் வேறு மாநிலத்தில் இருந்து பிரிந்த தினத்தை அவரது மாநிலம் இனமாக கொண்டாடி வருகின்றன. இந்த நிலையில் இன்று மாநிலங்கள் உருவான தினத்தை முன்னிட்டு பல்வேறு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஜனாதிபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திரவுபதி முர்மு தனது ‘எக்ஸ்’தளபதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது அரியானா, பஞ்சாப், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு ஆகிய மாநில மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மக்கள் நாட்டின் வளர்ச்சி பயணத்தில் தொடர்ந்து பங்களிக்கவும் அவர்களின் வாழ்க்கை அமைதி மற்றும், செழிப்புடன் அமைய வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்.அனைத்து மாநில மக்களின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய வாழ்த்துகிறேன் எவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.