வங்கக்கடலில் இன்று புயல் சின்னம் உருவானது!

சென்னை, அக்.14 வங்­கக்­கடலில் இன்று காற்­றழுத்த தாழ்வு நிலை
(புயல் சின்­னம்) உருவா­னது. இதன் காரணமாக தமிழ்­நாட்டில் அடுத்த 3
நாட்­களுக்கு மிகக் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.
அதே நேரத்­தில் நாளைமுதல் வட கிழக்கு பருவம­ழையும் முறைப்­படி
தொடங்க உள்­ளது.இந்த தென்­மேற்கு பருவ­ம­ழைக் காலம் ஜூன் 1ல் தொடங்கி செப்­டம்­பர் 30–ல் முடிவ­டை­யும். இந்தஆண்டு மே கடை­சியில் தொடங்­கிவிட்­டது. செப்
டம்­பர் 30–ஆம் தேதியுடன் நிறை­வ­டைந்­துவிட்­டது.இந்த ஆண்டு சரா­ச­ரியை விட கூடு­த­லாக மழை பெய்­
துள்­ளது.இந்த மழைக்­கா­லம் முடிந்த பிறகு சிறிது இடைவெளி விட்டு வட கிழக்கு பருவமழை தொடங்­கும்.பொதுவாக அக்­டோ­பர் 20–ஆம் தேதி இந்த மழை பெய்­யத் தொடங்­கும். ஒரு சில வருடங்­களில் ஓரிரு நாட்­கள் முந்­தும் அல்­லது பிந்
தும். ஆனால் இந்த ஆண்டு வெகு நாட்­களுக்கு முன்னரே நாளை முதல் வடகிழக்கு பருவமழை
தொடங்­கிவிடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்­துள்­ளது.
தென்­மேற்கு பருவ மழை­யைப்­போல இந்த ஆண்டு வடகி­ழக்கு பருவம­ழையும் சரா­ச­ரியை விட கூடு­த­லாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்
துள்­ளது. குறிப்­பாக சென்னை உள்­ளிட்ட வடமாவட்­டங்­களில் அதிக
மழை இருக்கும்.வட கிழக்கு பருவ மழை முன்­கூட்டியே தொடங்­கும் வகையில் கடந்த சில தினங்க­ளா கவே அதற்­கேற்ற சூழல் நிலவி வந்­தது. காற்றின் சுழற்சி காரண மாக தமிழ்­நாட்டில் பல இடங்­க­ளில் பலத்த மழை பெய்துவந்­தது. நேற்று முன்­தி­னம் இரவில் கோவை­யில் மிக பலத்த மழை கொட்டித்தீர்த்­தது. அதைப்­போல மது­ரை­யில் 4 மணி
நேரத்­தில் 16செ.மீ. அள­வுக்கு மழை
பெய்துள்­ளது. இதன்காரண­மாக அந்த 2 ஊர்­களிலும் பல இடங்­களை வெள்­ளம் சூழ்ந்­தது.இந்த நிலையில் வங்­கக்­க­டலில் 14–ஆம் தேதி(இன்று) குறைந்த காற்­ற­ழுத்த தாழ்வு நிலை உருவா­கும் என்று நேற்று முன்­தி­னம் வானிலை ஆய்வு
மையம் கணித்­திருந்­தது. அதற்­கேற்ப இன்று குறைந்த காற்­றழுத்த தாழ்வு நிலை(புயல் சின்­னம்) உருவாகி உள்­ளது.இது படிப்­ப­டியா க மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழ்­நாடு –தென்ஆந்­திரம் கடலோரப்பகுதியில் நிலை
கொள்ளும் எனமதிப்பிடப்­பட்டுள்ளது.இதன்காரணமாக
சென்னை, செங்­கல்­பட்டு, காஞ்சி புரம், திருவள்­ளூர்,விழுப்­புரம், கடலூர் உள்ளிட்ட வட கட­லோர மாவட்­டங்­களிலும், சில உள் மாவட்­டங்­களிலும் நாளை முதல் 17–ஆம் தேதி வரை பலத்த மழை பெய்­யும் என்று கணிக்­கப்­பட்டுள்ளது.