நிதி­ய­மைச்­சர் பதவி வில­கி­னால் நானும் பதவி விலக தயார் சித்­த­ராமையா!

கர்­நா­டகா,செப்.29 கர்­நாடகா­வில்’முடா’ நில முறை­கேடு தொடர்­பாக முத­லமைச்­சர் சித்­த­ராமையா மீது வழக்கு பதிவு செய்து விசா­ரணைநடத்­து­மாறு லோக் ஆயுக்­தாவிற்கு சிறப்பு நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.இந்த விவ­கா­ரத்­தில்3 பேர் அளித்த புகா­ரின்பேரில் நீதி­மன்ற வழி­காட்­டு­த­லின் ­படி சித்­தராமை­யா­வுக்கு எதி­ராக மைசூருலோக் ஆயுக்தா போலீ­சார் வழக்­குப்­ப­திவு செய்­துள்­ள­னர்.ஊழல் புகா­ரில் வழக்கு பதிவு செய்­யப்­பட்­ட­தால் முதல்­வர் பதவி யைன சித்­த­ராமையா ராஜிம செய்ய வேண்டும் ­என்று பாஜக­வி­னர் வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னர்.இந்­நி­லை­யில், தேர்­தல் பத்­தி­ரங்­கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகா­ரில் மத்­திய நிதி­ய­மைச்­சர் நிர்­மலா சீதாரா­மன் மீதுவழக்கு பதிவு செய்து விசாரிக்கப் ­பெங்க­ளூரு குற்­ற­வி­யல் நடு­வர் நீதி­மன்­றம் அதி­ரடி உத்­தரவு பிறப்­பித்­துள்­ளது.இந்த விவ­கா­ரம் தொடர்­பாக சித்­த­ராமையா தனது எக்ஸ் பக்­கத்­தில் பதி­விட்­டுள்­ளார்.அவ­ரது பதி­வில்,”தேர்­தல் பத்­தி­ரங்­கள் மூலம் மிரட்டி பணம்பறித்த புகா­ருக்கு பிர­த­மர் மோடி,மத்­தியநிதி­ய­மைச்­சர் நிர்­மலா சீதாரா­மன் மற்­றும் நிலஒதுக்­கீடு புகா­ரில் ஜாமி­னில் உள்ள மத்­திய அமைச்­சர் குமா­ர­சாமி ஆகி­யோர் முத­லில் பதவி விலக வேண்­டும். அவர்கள்   பதவி வில­கி­னால்,நானும் முத­லமைச்­சர் பத­வி­யில் இருந்து விலகத் தயார்” என்றுதெரி­வித்­துள்­ளார்.