இந்திய அஞ்சல் துறை சார்பாக தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி!

நாகர்­கோ­வில் செப் 19  இந்திய அஞ்­சல் துறை சார்­பில் தேசிய அளவி­லான கடிதம் எழுதும் போட்டி நடை­பெற உள்ளது. எனவே இப்­போட்டி­யில் பொதுமக்­கள் மாணவ மாணவியர் என அனைத்து தரப்­பி­ன­ரும் பங்கு பெற்று பய­ன­டைய கன்­னி­யாகு­மரி அஞ்­சல் கோட்ட கண்­காணிப்­பா­ளர் செந்தில்கு­மார் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்­ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை­யில் கூறியிருப்­பதா­வது :இந்திய அஞ்­சல் துறை சார்­பில் தேசிய அளவி­லான கடிதம் எழுதும்போட்டி செப்­டம்­பர் 14முதல் டிசம்­பர் 14 வரை நடத்­தப்­ப­டுகி­றது. இந்த போட்டிக்கு அனைத்து வய­தி­ன­ரும் வரவேற்­கப்­படுகின்­ற­னர்.போட்டிக்கான கடிதத்தை, “எழுது­வதில் மகிழ்ச்சி: டிஜிட்­டல் யுகத்தில் கடிதங்­களின் முக்­கி­யத்து­வம்” “த ஜாய்ஆப் ரைட்டிங் : இம்­போர்ட்­டன்ஸ் ஆப் லெட்­டர்ஸ் இன் எ டிஜிட்­டல்ஏஜ் ” என்ற தலைப்­பில் தமிழ், ஆங்கி­லம் மற்­றும் ஹிந்தி இவற்­றில் ஏதா­வது ஒரு மொழியில் எழுதி‘முதன்மை அஞ்­சல் துறைதலை­வர், தமிழ்­நாடு வட்­டம் சென்னை – 600002’என்ற முக­வ­ரிக்கு அனுப்ப வேண்டும்.உள்­நாட்டு கடித பிரி­வில் (இலேண்ட் லெட்­டர்கார்டு ) 500 வார்த்­தை­களுக்கு மிகாமலும், கடிதஉறை பிரிவில் (என்­வளோப் ) 1000 வார்த்­தை­களுக்கு மிகாமலும் கைப்பட எழுத வேண்டும்.”01.01.2024 அன்று 18வயது நிறைவு பெற்­ற­வன்/ நிறைவு பெறாத­வன்”என்ற வயது சான்று கடிதத்­தில் கண்டிப்­பாக இடம் பெற்­றிருக்க வேண்டும். போட்டியில் பங்கு­ பெ­று­வோ­ரின் பெயர் மற்­றும் இருப்­பிட முக­வ­ரியைகடி­தத்தில் தவ­றாமல் குறிப்பிட வேண்டும். இப்போட்டியில் மாநில அளவில் வெற்றி பெறு­வோ­ருக்கு முதல் பரிசு ரூ.25000/, இரண்­டாம் பரிசு ரூ. 10000/ மற்­றும் மூன்றாம் பரிசு ரூ. 5000/வழங்­கப்­ப­டும்.தேசிய அளவில் வெற்றி பெறுவோ­ருக்கு முதல்பரிசு ரூ. 50000/, இரண்­டாம் பரிசு ரூ. 25000/ மற்றும் மூன்­றாம் பரிசு ரூ.10000/ வழங்­கப்­ப­டும்.பொதுமக்­கள் மற்­றும் மாணவ மாணவி­கள் அனை­வ­ரும் இப்­போட்டி­யில் பங்கு­பெற்று பய­னடை­யுமாறு அந்­தச் செய்திகுறிப்­பில் கூறப்­பட்டுள்ளது.