சென்னை, நவ. 9 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், 29 மாவட்டங்களில்,141 அரசுப்பள்ளிகளில் 171.16 கோடி ரூபாய்செலவில் கட்டப் பட்டுள்ள 754 புதிய வகுப்பறைக்கட்டடங்கள், 17ஆய்வகக்கட்டடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் கஸ்தூர்பாகாந்தி பாலிகாவித்யாலயா மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவிஷ்யவித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளிகளுக்கான கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.மேலும், கருணை அடிப்படையில் 49 நபர்களுக்கு பணிநியமனஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.இந்நிகழ்ச் சியில்,அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி,அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச்செய லாளர் முருகானந்தம்,ஆகியோர் கலந்து கொண்டனர்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று தலைமைச்செயலகத்தில், அமைச்சர்.மா.சுப்பிரமணியன் மக்களைத்தேடி மருத்துவம்’ திட்டத்திற்கு வழங்கப்பட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2024ஆம் ஆண்டிற்கான விருது மற்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் சார்பில்உணவு பாதுகாப்பு துறையில் மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டிற்கான செயல்பாட்டில் தமிழ்நாடு இந்தியஅளவில் 2வது இடம் பெற்றதற்காக வழங்கப்பட்ட விருது.ஆகிய 2 விருதுகளை காண்பித்து வாழ்த்துப் பெற்றார். புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில்,இந்திய உணவு மற்றும் தரநிர்ணய ஆணையத்தால் உணவு பாதுகாப்புதுறையில் மனித வளம் மற்றும் நிறுவனங்களைப் பற்றிய தரவுகள், தர நிர்ணய விதிமுறைகளைப்பின் பற்றுதல்,உணவுபொருட்களைப் பரிசோதிப்பதற்கான கட்ட மைப்பு மற்றும் கண்காணிப்பு, திறன் மேம்பாடு பயிற்சி மற்றும் நுகர்வோருக்கு அதிகாரம் அளித்தல் ஆகிய 5குறியீடுகளின் அடிப்படையில் தரமதிப்பீடு செய்து,202324 ஆம் ஆண்டிற்கான மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டிற்கான செயல்பாட்டில் இந்திய அளவில் 2வது மாநிலமாக, தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.கடந்த 3 வருடங்களாக தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறையானது.தொடர்ந்து முதல் மூன்று இடங்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பொறியியல்பணிகள் தேர்வு வாயிலாக தமிழ்நாடுகுடிநீர்வடிகால்வாரியம், பொதுப்பணித்துறை. நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள்துறை,குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்நிறுவனங்கள் துறை. தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஆகியதுறைகளில் உதவிப் பொறியாளர் பணியிடத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட 246 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 20 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர்.மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
புதிய வகுப்பறைகள்- விடுதி கட்டிடங்கள்- முதலமைச்சர் திறந்து வைத்தார்!






