மகாகவி பாரதியார் நினைவு நாள்: அவர் படித்த வகுப்பறையில் இசை அஞ்சலி செலுத்திய நெல்லை பள்ளி மாணவிகள்!

திரு­நெல்­வேலி: மகாகவி சுப்­ர­ம­ணியபாரதியா­ரின் 103வது நினைவு
தினம் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்­ப­டுகிறது. தூத்­துக்குடி
மாவட்­டம் எட்­டை­யா­புரத்­தில் பிறந்து நெல்லை சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள ம.தி.தா.
இந்து கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் மகா­கவி சுப்பிரம­ணிய
பாரதியார் தனது பள்ளி படிப்பை
மேற்­கொண்­டார். அவர் படித்த பள்ளி வகுப்­பறை இன்­றைய
தினமும் நாற்­றங்­கால் என்ற பெயரில் பழமை மாறா­மல் பரா­ம­ரிக்­கப்பட்டு வருகிறது. அந்த வகுப்­ப­றை­யில் மகா­கவிபாரதியா­ரின் வாழ்க்கை வரலாற்று புகைப்­ப­டங்­க­ளும் அவரது மார்­ப­ளவு சிலை­யும்
வைக்­கப்­பட்­டுள்­ளது.இந்நிலை­யில்
பாரதியின் நினைவு தின­மான காலை 10 மணி அள­வில் அப்­பள்ளியை சேர்ந்தமாணவி­கள் மற்றும் ஆசிரியர்­கள் பாரதியார்
படித்த வகுப்­ப­றையில் இருக்­கும்
மார்­ப­ளவு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் பாரதிபடித்த சுதந்திர பாடல்­கள் பாடி அஞ்­சலி செலுத்­தினர்.தொடர்ந்து தேசிய ஒருமைப்­பாட்டு உறுதி மொழி எடுத்து மகா­கவி பாரதி
யா­ரின் உருவப்­படத்­திற்கு மலர் தூவி மரியாதை செய்­த­னர்.