மாணவி பலாத்­கார வழக்கில் போலி என்.சி.சி. முகாம் தக­வலை மறைத்த பயிற்சியாளர் கைத

கிருஷ்­ண­கிரி,செப்8 கிருஷ்­ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்­திகுப்­பத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த போலி என்.சி.சி. முகா­மில் கலந்து கொண்ட 13 வயதுடைய 8-ம் வகுப்பு மாண­வியை போலி பயிற்­சியா­ளர் சிவரா­மன் என்­ப­வர் பாலியல் பலாத்­கா­ரம் செய்­தார்.மேலும், 13 மாண­விகள் பாலியல் தொந்­த­ரவுக்கு உள்­ளா­னார்­கள்.இந்தசம்­ப­வம் தொடர்பாக சிவரா­மன் மற்­றும் சம்­ப­வத்தை மறைத்தபள்ளி தாளா­ளர்,முதல்­வர் உள்­பட மொத்தம் 13 பேர் பர்கூர் அனைத்து மக­ளிர் போலீசா­ரால் கைது செய்­யப்பட்­ட­னர்.இதற்­கிடையே கைது நடவடிக்கை முன்பு,விஷம் குடித்து தற்­கொலைக்கு முயன்ற சிவரா­மன், சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 23-ந் தேதி உயிரி­ழந்­தார்.பள்ளி மாண­வி­கள் பாலியல் துன்புறுத்­தல் சம்­ப­வம் குறித்து, தமி­ழக முதல்-அமைச்­சர் உத்­த­ரவின் பேரில் ஐ.ஜி. பவா­னீஸ்வரி தலை­மையிலான சிறப்பு புலனாய்வு குழுவும், சமூக நலத்துறை செயலா­ளர் ஜெயஸ்ரீமுரளிதரன் தலை­மையிலான பல்­நோக்கு குழுவினரும் தொடர்ந்து விசா­ரணை நடத்தி வருகின்­ற­னர்.இதில் வேறு ஒரு தனியார் பள்ளியில் சிவரா­ம­னால் நடத்­தப்­பட்ட போலி முகா­மில் கலந்துகொண்ட 14 வயது மாண­வியும் பாலியல் துன்புறுத்­த­லுக்கு உள்­ளாக்­கப்பட்­டது தெரிந்­தது.தொடர்ந்து அப்­பள்ளியின் பெண் முதல்­வர் கைது செய்­யப்­பட்­டார். இந்­த­நி­லை­யில், சிவரா­ம­னால் நடத்­தப்­பட்டபோலி முகாம்­கள் குறித்த தக­வல்­களைமறைத்­த­தாக, காவே­ரிப்பட்­ட­ணம் சந்­தை­ பாளை­யம்பகுதி­யைச்சேர்ந்த என்.சி.சி. பயிற்சியா­ளர் கோபு (வயது47) என்­ப­வரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று கைது செய்­தனர்.இதுகுறித்து போலீ­சார் கூறும்­போது, சிவரா­மன்நடத்திய போலி முகாம்கள் குறித்து தெரிந்­தும்,கோபு (வயது 47)அவருக்கு உறுது­ணை­யாக இருந்­துள்­ளார்.குறிப்­பாக சில தனியார் பள்ளி­க­ளில் நடந்த போலி முகாம்­க­ளில் கோபுவும் கலந்து கொண்­டது தெரியவந்தது என்­ற­னர்.