காலாண்டு தேர்வு விடுமுறை அக்.6 வரை நீட்டிப்பு தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு !

சென்னை:தமி­ழ­கத்­தில் உள்ளஅனைத்து வகை பள்­ளி­க­ளுக்­கான காலாண்­டுத்தேர்வு விடு­முறை அக்.6ம்தேதி வரை நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது. முன்­ன­தாக அக்.3ம் தேதி பள்­ளி­கள் திறக்­கும் என்று அறி­விக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில்,தற்­போது காலாண்டு விடு­மு­றைக்­குப் பிறகு பள்­ளி­கள் அக்.7ம் தேதி திங்­கள்­கி­ழமை திறக்­கப்­ப­டும் என்றுஅறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது­ தொ­டர்­பாக பள்­ளிக் கல்­வித்­துறை வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில்,பள்­ளிக் கல்­வித்­து­றை­யின் கீழ் செயல்­ப­டும் அனைத்து அரசு, அரசு உத­வி­பெ­றும் மற்­றும் தனி­யார் தொடக்க,நடு­நிலை, உயர்­நிலை மற்­றும் மேல்­நி­லைப் பள்­ளி­கள் காலாண்­டுத் தேர்­வு­கள் விடு­முறை முடிந்துஅக்.7ம் தேதி (திங்­கள்­கி­ழமை) அன்று திறக்­கப்­படும், என்று அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.தமி­ழக பள்­ளிக்­கல்வி பாடத்­திட்­டத்­தில் அரசு,அரசு உதவி மற்­றும் தனி­யார் பள்­ளி­க­ளில் 6 முதல்12ம் வகுப்பு வரை பயி­லும் மாண­வர்­க­ளுக்கு ஆண்­டு­தோ­றும் செப்­டம்­பர் மாதம் காலாண்­டுத் தேர்வு நடைபெற்று வரு­கி­றது.அந்­த வகை­யில் நடப்பு கல்­வி­யாண்­டில் 11, 12 பயி­லும் மாண­வர்­களுக்­கான தேர்வு செப்.19முதல் தொடங்­கி­யது.இந்த வகுப்­பு­க­ளுக்­கானதேர்வு செப். 27ல் முடி­வடை­யும். அதேபோல், 6முதல் 10ம் வகுப்பு வரைபயி­லும் மாண­வர்­க­ளுக்­கான காலாண்­டுத் தேர்வுசெப்.20 முதல்­செப். 27வரை நடைபெற உள்­ளது.               இதை­யடுத்து செப்.28முதல் அக். 2 வரை பள்ளிமாண ­வர்­களுக்கு காலாண்டு விடு­முறை அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.