பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் அனைத்து நாடார் சங்கங்கள் கள்ளுக்கடையை திறக்க கோரி ஆர்பாட்டம

சென்னை, செப்­.04, தமிழ்­நாட்­டில் கள்­ளுக்­ கடை திறக்க அரசு அனும­திக்க வேண்டி பெருந்­தலை­வர் மக்­கள் கட்சி மற்றும் அனைத்து நாடார்சங்­கங்­கள்சார்­பில் ஆர்ப்­பாட்­டம் நடை­பெற்­றது.  பெருந தலைவர் மக்­கள் கட்சி ­த­லை­வர் என்.ஆர்.தன­பாலன் தலை­மையில் நடை­பெறற இநத    ஆர்பாட்­டத்தில் திருவள்­ளூர்மத்திய கிழக்கு மாவட்டசெயலா­ள­ரும் முன்­னாள்அமைச்­ச­ருமான பா.பெஞ்­ச­மின், அனைத்து மக்­கள் அரசியல் கட்சி நிறு­வன தலை­வர் ராஜேஸ்­வரி பிரியா,தமிழ்­நாடு நாடார் இளை­ஞர் முன்­னேற்ற பேரவை பொதுச் செயலா­ளர் வி.எஸ். ஏமைக்­கேல்­ராஜ், அதிமுக இலக்கிய அணிமாநில துணைசெயலா­ளர் இ .சி சேகர், தமிழ்­நாடு வியாபாரிகள் சங்கபேரவை ஏ. முத்துக்குமார மற்றும் பலர் கலந்­து­ கொண்­ட­னர். என்.ஆர்.தன­பாலன் செய்­தியா­ளர்­ளிடம் தெரிவித்­த­தாவது: தமிழ்­நாட்­டில் கள்­ளுக்­கடை திறக்க அரசு அனும­திக்க வேண்டும் .பனை­மரம் ஏறும் போது விபத்தில் உயிரிழப்பு ஏற்­பட்­டால் அவர்­க­ளின் குடும்­பத்தி ற்கு தலா,ரூ.10லட்­சம் நிதியும் அவர்­கள் குடும்­பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்­ப­டை­யில்அரசு பணியும் வழங்கவேண்டும். பதநீர் இறக்கி விற்­பனை செய்­யும் மரம் ஏறும்தொழிலா­ளர்­கள் மீது காவல்துறை பொய்வழக்கு போடுவது நிறுத்­திக் கொள்ள வேண்டும் .கருப்­பட்டி மற்றும் பனைப் பொருட்­களை அரசு விவ­சாயிகளிடமிருந்து கொள்­முதல் செய்து ரேஷன் கடை­யில் விற்­பனை செய்யவேண்டும் .கோவை வேளண்மை கல்லூரி உருவாக்கியுள்ள நவீன பனை­மரம் ஏறும்இயந்­திரத்தை பனைத்தொழிலா­ளர்­க­ளுக்கு அரசு இலவ­ச­மாக வழங்கவேண்டும் ஆகிய கோரிக்­கை­க­ளை அரசு நிறைவேற்ற வேற்­ற­வேண்டும் என்­றார்.