தூத்துக்குடி அருகே பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்து: நிதியுதவி அறிவிப்பு

தூத்துக்குடி, செப்.01 பட்டாசு கிடங்கில் இன்றுஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கிஉயிரிழந்த இரண்டு பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம்,ஏரல் வட்டம், குறிப்பன்குளம்
கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த இரண்டு நபர்களின்
குடும்பத்தினருக்கு ஆறுதல்மற்றும் நிதியுதவியினை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தனது எக்ஸ் வலை தளத்தில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம்,ஏரல் வட்டம், குறிப்பன்குளம் கிராமத்திலுள்ள, தனியார்பட்டாசு ஆலையில் (31.-8.-2024)
மாலை 5.30 மணியளவில் எதிர் பாராதவிதமாக நிகழ்ந்த வெடி விபத்தில் திரு.முத்து கண்ணன்(வயது21) த/பெ. கள்ளாணட நாடார் மற்றும் திரு.விஜய்(வயது 25) த/பெ. தங்கவேலு ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.மேலும் இந்த விபத்தில் திரு.செல்வம் (வயது 21),திரு.பிரசாந்த் (வயது 20),திருமதி.செந்தூர்கனி (வயது45), திருமதி.முத்துமாரி(வயது 41) ஆகியோர் பலத்தகாயமடைந்து திருநெல்வேலி மற்றும் சாத்தான்குளம் அரசுமருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.இந்த வெடிவிபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்வதுடன்முதல்-அமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாயும்,பலத்த காயமடைந்து சிகிச்சைபெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.