மதுரை
10/12/25
மதுரை அருகே பட்டியல் சமூக இளைஞர் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் தமிழர் முற்போக்கு கழகம் கட்சியினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக முன் மக்கள் தமிழர் முற்போக்கு கழகம் கட்சியின் நிறுவன தலைவர் ஐங்கரன்
தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீரனூரில் ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்க சட்டப் போராட்டம் நடத்தி உயர் நீதிமன்ற உத்தரவை பெற்ற பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர் முத்துராஜா மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல்துறை DSP சிவக்குமாரை கண்டித்தும் கோஷங்கள் எழப்பி போராட்டம் நடத்தினர்
இந்த போரா ட்டத்தில் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் வினித், புறநகர் மாவட்டச் செயலாளர் ஆனஸ்ட். மேற்கு மாவட்ட செயலாளர் முத்துக்குமார், மாநிலமகளிர் அணி தலைவி பிரகதி, மகளிர் அணிமாவட்டச் செயலாளர்கள் கார்த்திகா தேவி , இந்திரமதி , மற்றும்
சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொ

துச்செயலாளர் வன்னியரசு, கண்டண உறையாற்றினார் மற்றும் இப்போராட்டத்தில் தேவதாஸ்,
பசும்பொன்பாண்டியன், மேரி, விசிக கிழக்கு மாவட்டச் செயலாளர் அரச முத்துப்பாண்டியன், மற்றும் ஜனநாயக இயக்கங்கள், மனித உரிமை ஆர்வலர்கள் பஞ்சமி நில மீட்பு செயல்பாட்டளர்கள் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்






