வேலூர்,ஆக. 24: வேலூர் அடுத்த,காட்பாடி வள்ளிமலை கூட்டுரோடு அருகில் உள்ள ஸ்ரீவரசித்தி விநாயகர் கோயிலில் மஹாசங்கடஹர சதுர்த்திவிழா விமரிசைய க நடந்தது.இதையொட்டி ஸ்ரீவரசித்தி விநாயகருக்கு பல்வேறு வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.இதை தொடர்ந்து மலர்மாலை,வெட்டிவேர் மாலை, அருகம்புல் மாலை,பட்டுவஸ்திரம் அணிவித்துமகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. அதையடுத்து சுவாமிக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மஹா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது. பூஜைஅலங்காரத்தை பிரம்மபுரம் ஜெயக்குமார் அர்ச்சகர் செய்திருந்தார். ஸ்ரீமஹாலஷ்மி பாத்திரக்கடைஉரிமையாளர் ரமேஷ் குடும்பத்தார் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
காட்பாடி வள்ளிமலை ரோடு ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில்மஹா சங்கடஹர சதுர்த்தி விழா!






