திருநெல்வேலி, ஆக. 24 : மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாணவ- மாணவிகள்! திருநெல்வேலி, ஆக.23:-நெல்லைமாநகராட்சிக்குட்பட்ட தச்சநல்லூர்மண்டலத்தில் உள்ள, மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக,தேதிய குடற்புழு நீக்கநாள் நடத்தப்பட்டது. இந்நாளை யொட்டி, அப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு, நெல்லை மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன் முன் னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கா.ப. கார்த்திகேயன்,குடற்புழு நீக்கமாத்திரைகளை வழங்கினார். அதனைத்தொடர்ந்து,ஆசிரியப்பெருமக்கள், மாணவ மணிகள்மற்றும் நிகழ்ச்சிக்காக வந்திருந்தோர் அனைவரும் இணைந்து,மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், உறுதிமொழிஎடுத்துக்கொண்ட னர் .இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் குறிப்பிட்டதாவது: “இந்த குடற்புழுநீக்க மாத்திரைகளை உட்கொள்வதின் மூலம், குழந்தைகளுக்கு குடற்புழுவினால் உண்டாகும் ரத்தசோகை நோயை தடுக்க இயலும்.அத்துடன்அவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி, அறிவுத்திறன், உடல்வளர்ச்சி மற்றும் ஆரோக்கியம் ஆகியவை, மேம்படும். நமது நெல்லைமாவட்டத்தில், 1 முதல் 19 வயது வரையிலான சிறார்கள் 5,49, 813 பேருக்கும், 20முதல் 30 வயதுவ ரையில ா ன பெண்கள் 1, 61,844 பேருக்கும் என, மொத்தம் 7,11, 657 பேருக்கு,குடற்புழு மாத்திரைகள் இம்மாதம் [ஆகஸ்ட்] 29-ஆம் வரையிலும், பள்ளிகள்,கல்லூரிகள், அரசு ஆரம்பசுகாதார நிலையங்கள், அங்கன்வாடிமையங்கள் ஆகியவற்றின் மூலம்வழங்கப்படுகின்றன .விடுப ட்டவர்களுக்கு,மறுநாள்30-ஆம்தேதிவழங்கப்படும்!”- இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் குறிப்பிட்டார்.இந்தநிகழ்ச்சியில்,மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் கீதா ராணி,மாநகர நல அலுவலர் பொறுப்பு வகிக்கும் டாக்டர் ராணி,தச்சநல்லூர் மண்டல வார்டுக்குழு தலைவி ரேவதி பிரபு உட்படபலர், கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் நடைபெற்ற தேசிய குடற்புழு நீக்க நாள் நிகழ்ச்சி!






