கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீடு!

சென்னை ஆகஸ்ட் 19,

கலை­ஞர் நூற்­றாண்டு விழாவை முன்­னிட்டு 18.8.2024 மாலை 6.50 மணிக்கு

“முத்­த­மி­ழ­றி­ஞர்கலை­ஞர்நூற்­றாண்டு நாண­யம்”சென்னைகலை­வா­ணர் அரங்­கில் தமிழ்­நாடு முதலமைச்­சர் மு.க.ஸ்டாலின் தலை­மையில் ஒன்­றிய பாது­காப்­புத்துறை அமைச்­சர் ராஜ்­நாத்
சிங்கரங்­க­ளால் வெளி­யி­டப்பட்டது.
இதையொட்டி இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திரமோடி வாழ்த்­துச் செய்தி அனுப்­பி­யுள்­ளார். அதில் அவர் முத்­த­மி­ழ­றி­ஞர்கலை­ஞர் நூற்­றாண்டு நினைவு நாணய வெளி­யீட்டு விழா நடைபெற வி­ருப்­பது அறிந்து தான் மிக­வும் மகிழ்ச்சி அடைவதாக­வும், இவ்­விழா இந்­தி­யாவின் மிக­வும் புகழ்­பெற்ற தலை­வர்­க­ளில் ஒரு­வ­ரான கலை­ஞ­ருக்­காக நடைபெறும் முக்­கி­ய­மான விழாவா­கும் என்­றும் தெரி­வித்துள்ள பிர­த­மர், இந்­தியஅர­சி­யல், இலக்­கி­யம் மற்றும் சமூ­கப் பணி­கள் ஆகிய பல்­வேறு களங்­களில் உயர்ந்து விளங்­கிய தலை­வ­ராகதிகழ்ந்த கலை­ஞர், தமிழ்­நாட்­டின் வளர்ச்சி­யி­லும், நாட்­டின் முன்­னேற்­றத்­தி­லும் எப்­போதும் அக்­கறை கொண்­டவராக விளங்­கி­னார் என்­றும் குறிப்­பிட்­டுள்­ளார்.ஒரு சிறந்த அர­சி­யல் தலை­வ­ராகதிகழ்ந்த கலை­ஞர், மக்­க­ளால் பல­முறை முதலமைச்­ச­ராக தேர்ந்­தெடுக்­கப்­பட்டு, அப்­பத­வி­யி­லி­ருந்து சமூக வளர்ச்சிமற்றும் அர­சி­யல் குறித்த அவ­ரது ஆழ­மான புரி­தலை அடிக்­கோ­டிட்­டுக்காட்­டும் வகை­யில் நமது நாட்­டின் வர­லாற்­றில்அழிக்க முடி­யாத அடையா­ளத்தை விட்­டுச் சென்­றுள்­ளார் என்­றும் தெரி­வித்துள்­ளார்.பன்­மு­கத்திறமை கொண்ட கலை­ஞர், தனது எழுத்­துக்­க­ளின் மூலம் தமிழ் மொழி மற்­றும் கலாச்­சா­ரத்தை மேம்­படுத்த மேற்­கொண்ட முயற்சி­கள் இன்­றும் மக்­க­ளால் நினைவு கூரப்­படு­கின்­றன என்­றும்,அவ­ரது இலக்­கிய ஆற்­றல், அவ­ரதுபடைப்­பு­க­ளின் மூலம் பிர­கா­சித்­தது மட்­டு ­மல்­லாமல், அவ­ருக்கு’கலை­ஞர்’என்ற அன்­பான பட்­டத்தை­யும் பெற்­றுத் தந்­துள்ளது என்­றும்குறிப்­பிட்­டுள்­ளார்.இந்த நினைவு நாண­யம்வெளி ­யிடப்­படு ­வதன் மூலம்,கலை­ஞ­ரின் நினைவு போற்­றப்­ப­டு­கி­றதுஎன்­றும்,இந்த நினைவு நாண­யம்கலை­ஞர் பின்­பற்றிய கொள்­கை­கள்,மர­பு­கள் மற்­றும்அவ­ரதுபணி­களை என்­றென்­றும் நினை­வூட்­டு­ வதாக அமையும் என்­றும் தெரி­வித்­துள்ளார்.மேலும், இந்த முக்­கி­ய­மான தரு­ணத்­தில் கலை­ஞ­ருக்கு தனது நெஞ்­சார்ந்த அஞ்­ச­லி­யைச்செலுத்த விரும்­பு­வதாகும் குறிப்­பிட்­டுள்ள இந்­தி­யப் பிர­தமர், 2047ஆம் ஆண்­டுக்­குள் வளர்ச்­சி­ய­டைந்த இந்­தி­யாவை உரு­வாக்­கு­வதை நோக்கி நாம் நம்­பிக்­கை­யு­டன் நடைபோடும் இந்தவேளையில்,கலை­ஞர் போன்ற தலை­வர்­க­ளின் தொலை­நோக்­குப் பார்­வை­யும், சிந்­த­னைக­ளும், நம் தேசத்தின் பய­ணத்­தைத் தொடர்ந்து வடி­வமைக்­கும் என்­றும்,முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் நூற்­றாண்டு நினைவு நாணய வெளி­யீட்டு விழா மாபெ­ரும் வெற்­றி­ய­டைய தனது வாழ்த்­துக்­களை­யும் தெரி­வித்­துள்­ளார்.
பிர­த­ம­ரின் வாழ்த்­துச் செய்­திக்கு தமிழ்­நாடு முதலமைச்­சர்மு.க.ஸ்டாலின் நன்றி தெரி­வித்து சமூக வலைத்­த­ளங்­க­ளில் வெளி­யிட்­டுள்ள பதி­வில், கலை­ஞர் நூற்­றாண்டு நினைவு நாணய வெளி­யீட்டு விழாவுக்கு பிர­த­மர் நரேந்­திரமோடி தமது உளங்­க­னிந்த வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்தமைக்­கும், இந்­நி­கழ்வு வெற்­றி­பெற அவ­ரது ஆத­ர­வுக்­கும் எனது நெஞ்­சார்ந்த நன்­றி­யைத் தெரி­வித்­துக் கொள்கி­றேன் என குறிப்பிட்டுள்ளார்