திருப்பத்தூர், ஆக.4 – திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம் பள்ளி அடுத்த கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி.இவரது மகன் முகிலன். இவர் திருப்பத்தூர் பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தோமினிக் சாவியோமேல் நிலைப்பள்ளியில் மாணவர் விடுதியில் தங்கி பதினோறாம் வகுப்பு படித்துவந்தார். இந்த நிலையில் மாணவன் கடந்த ஒன்றாம் தேதி காலை வகுப்புக்கு வராத காரணத்தால் ஆசிரியர்கள் பெற்றோருக்கு தொலைபேசி வாயிலாக அழைத்து தங்களது பிள்ளை வீட்டிற்கு வந்தாரா என கேட்டனர்.இதனால் அதிர்ந்து போன பெற்றோர்கள் என் மகன் உங்கள் பள்ளியில், மாணவர் விடுதியில் தான் படித்துவருகிறான். அப்படி இருக்க எப்படி வீட்டிற்கு வருவான் எனகேள்வி எழுப்பினார். அதன் பின்னர் கொத்தூரில்இருந்து பெற்றோர்கள் அவசர அவசரமாக பள்ளிக்கு வந்தனர். இந்தநிலையில் திருப்பத்தூர் நகரகாவல் நிலையில் கொடுத்த புகாரின் பேரில் தனிப் படையை அமைத்து இரண்டு நாட்களாக போலீசார் தேடி வந்த னர்.இந்த நிலையில் தோமினிக் சாவியோ மேல் நிலைப்பள்ளியில் உள்ள முகப்பு மூடப்பட்டநிலையில் உள்ளகிணற்றில் ஒரு மாணவன் உடல் இறந்த நிலையில் கிடப்பது தெரிய வந்தது.இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற திருப்பத் தூர் நகர போலீசார் அந்தமாணவன் உடலை கிணற்றில் இருந்து வெளியே எடுத்து வந்து பார்த்த போது அது காணாமல் போன மாணவன் முகிலன் என்பது தெரிய வந்தது.இதனையடுத்து போலீசார் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட அம்மாணவனின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கிணற்றின் மேல்பாகம் மூடப்பட்ட நிலையில் இருந்த கிணற்றுக்குள் மாணவன் சடலம் கிடந்தது எப்படி,மாணவனின் இறப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்குச் சொந்தமான விடுதியில் தங்கிப் படித்தமாணவன் மாயமான தைவிடுதி கண்காணிப்பாளர் கவனிக்கவில்லையா? என கேள்வி எழுப்பும் பெற்றோர், பள்ளிகளில் தொடர்ந்து மாணவர்கள் உயிரி ழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.மேலும் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலம் உரிய விசாரணை நடத்திதங்களது மகனின் சாவுக் குஉரிய நீதி பெற்றுத்தர வேண்டும் எனவும் பெற்றோர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவன் மூடிய கிணற்றுக்குள் சடலமாக மீட்பு!






