ராமநாதபுரம் சட்டக்கல்லூரிக்கான புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

சென்னை. ஆக.13 சென்னை அம்­பேத்­கர் அரசு சட்­டக்­கல்லூரிவளாகத்தில் அமைக்கப்­பட்­டுள்ள விளையாட்டு திட­லையும் முதல்அ­மைச்­சர் திறந்­து ­வைத்­தார் தமிழ்­நாடு முதல்அ­மைச்­சர் மு.க.ஸ்டாலின்
இன்று(12.08.2024) தலை­மைச் செய­ல­கத்தில்,சட்­டத்துறை சார்பில் இரா­ம­நாதபுரம் அரசுசட்­டக் கல்லூரியில் 76கோடியே 60 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய்செல­வில்

கட்­டப்­பட்டுள்ள கல்லூரிக்­கான புதிய கட்­ட­டம் மற்றும் விடுதிக் கட்­ட­டம், திரு­வள்­ளூர் மாவட்­டம், பட்­ட­றைப்­பெ­ரும்­பு­தூர், சென்னை டாக்­டர் அம்­பேத்­கர் அரசு சட்டக் கல்லூரிவளாகத்தில் 1கோடியே 57 லட்­சத்து 76 ஆயிரம் ரூபாய்செல­வில் அமைக்­கப்பட்­டுள்ள கால்­பந்து மற்றும் மட்­டைப்­பந்து விளை­யாட்­டுத் திடல்ஆகியவற்றை காணொலிக்காட்சி வாயி­லாக திறந்து வைத்­தார்.
இரா­மநா­த புரம்மாவட்­டம், கீழக்­கரைவட்­ட ம் ,குதக்­கோட்டை கிரா­மத்தில் 1,76,549 சதுர அடி பரப்­ப­ளவில் 76கோடியே 60 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய்செல­வில் கட்­டப்­பட்டுள்ள இரா­ம­நாதபுரம் அரசு சட்­டக்­கல்லூரிக்கான புதிய கட்­ட­டம் மற்றும் விடுதிக் கட்­ட­டத்தை தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் திறந்துவைத்­தார்.
இப்­புதி ய கட்­ட­ட­மா­னது,26 வகுப்­ப­றை­கள், கருத்­த­ரங்குக்­கூ­டம், காணொலிக்காட்சி அறை, உள்­வி­ளையாட்டு அரங்­கம், சர்­வதேச தரத்தில் மாதிரி நீதி­மன்ற அரங்­கம், நிர்­வாகத் தொகுதிக் கட்­ட­டங்­கள், அதி­வேகஇணைய வச­திகளு­டன் கூடிய கம்­பி­யில்லா மண்­ட­லம்அடங்கிய நூல­கக் கட்ட­டங்­கள், டால்பிடிஜிட்­டல் ஒலிப்­பெருக்­கியு­டன் நவீனதொழில்நுட்ப வச­திகளு­டன் கூடிய கலையரங்­கம், விடுதி காப்­பாளர் அறை, 250மாண­வியர்­கள் தங்கும்வசதி கொண்ட விடு­திக் கட்­ட­டம்,மாற்றுத்திற­னாளிகளுக்­கான சாய்வு தளம் போன்ற பல்­வேறு வசதிகளு­டன் கட்­டப்­பட்டுள்­ளன 2022,2023 ஆண்­டிற்­கான சட்­டத்துறை மானியக்கோரிக்­கை­யில், திரு­வள்­ளூர் மாவட்­டம்,பட்­ட­றைப்­பெ­ரும்­பு­தூரில் உள்ள சென்னைடாக்­டர் அம்­பேத்­கர்அரசு சட்­டக் கல்லூரி­யில் விளை­யாட்­டுத்திடல் அமைக்­கப்­படும் என்று அறிவிக்­கப்பட்­டது.
அந்த அறிவிப்­பிற்கி­ணங்க, சென்னை டாக்டர் அம்­பேத்­கர் அரசுசட்­டக் கல்லூரி வளா­கத்தில் 1 கோடியே 57இலட்­சத்து 70 ஆயிரம்ரூபாய் செல­வில்அமைக்­கப்­பட்­டுள்ள கால்­பந்து மற்றும் மட்டைப்­பந்து விளையாட்­டுத் திடலை தமிழ்நாடு முத­ல­மைச்­சர்மாண­வர்­க­ளின் பயன்பாட்­டிற்­காக திறந்துவைத்­தார்.” இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது