“தமிழ்ப்புதல்வன்” திட்டத்தை, திருநெல்வேலியில் சட்டமன்ற பேரவை தலைவர் மு. அப்பாவு துவக்கி வைத்தார்!

திரு­நெல்­வேலி,ஆக.12:-தமிழ்­நாட்டு மாண­வர்கள் தர­ணியை வென்­றிட,”தமிழ்ப்­பு­தல்­வன்” திட்டம் என்­னும் புதிய திட்டத்தை, உயர்­கல்­வியை ஊக்­கப் படுத்­தி­டும் நோக்­கில், அரசு மற்­றும் அரசு உதவி பெறும்

பள்­ளி­களில்பயின்று,உயர்­கல்வி பயி­லும் மாண­வர்­களுக்கு மாதந்தோ­றும் ஆயி­ரம் ரூபாய் வழங்­கி­டும் உன்­னத திட்­டத்தை,தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டாலின், இன்று[ஆகஸ்ட்.9] கோவையில் உள்ள அரசு கலைக்­கல்­லூரி மைதா­னத்­தில்,துவக்கி வைத்­தார். அதனைத் தொடர்ந்து, இந்த தி ட ்­டத்தை ,திரு­நெல்­வேலி பாளையங­க ோட­டை ­யில் ,
நூறாண்­டு­கள் கண்ட பழை­மை­வாய்ந்த, தூயசவே­ரி­யார் கலை- அறி­வி­யல் கல்­லூ­ரி­யில்,மாவட்ட ஆட்­சித்­தலைவர் டாக்­டர் கா.ப. கார்த்­தி­கே­யன் தலைமை­யில்,பாளை­ய ங்­கோட்டை தொகுதி சட்­டமன்ற உறுப்­பி­னர்

மு.அப்­துல்வகாப், நெல்லை மாந­கராட்சி மேயர் கோ. ராமகிருஷ்­ணன், துணை மேயர் கே.ஆர். ராஜூ,மாவட்ட பஞ்­சா­யத்து தலை­வர் வி.எஸ்.ஆர்.ஜெக­தீஷ் ஆகி­யோர் முன்­னி­லை­யில், தமி­ழக சட்­டமன்ற பேரவை தலை­வர்
[ சபாநா­ய­கர்] அப்­பாவு,துவக்கி வைத்து, இத்­திட்டத்­தின் மூலம் பயன்­பெற­வுள்ள மாண­வர்­களுக்கு, பணம்
பெறு­வ­தற்­கான வங்கி பரி­வர்த்­தன அட்­டைகளை வழங்கி பேசி­னார்.அப்­போது பேசிய அவர்,”திரு­நெல்­வேலி

மாவட்டத்­தில், இத்­திட்­டத்­தின் கீழ், முதற்­கட்­டமாக 69 கல்­லூ­ரி­க­ளில் பயி­லும்,6361 மாண­வர்­கள் பயன் பெறு­வார்­கள்!” என்று,குறிப்­பிட்­டார். இந்த நி க ழ் ச் ­சி ­யி ல் ,திரு­நெல்­வேலி மண்­டல கல்­லூ­ரிக்­கல்வி இணை இயக்­கு­நர் அ.ரவீந்­தி­ரன்,மாவட்ட சமூ­க­நலசிறப்பு திட்ட செய­லாக்­கம்பிரிவு இணை இயக்­கு­நர் உமாதேவி,தூய சவே­ரி­யார்

கல்­லூரி தாளாளர் அருள் மு னை ­வ ர்ஞா.புஷ்­ப­ராஜ்,முதல்­வர் அருட்­தந்தை காட்­வின் ரூபஸ், மாவட்ட சமூகநலன் மற்­றும் மக­ளிர் உரி­மைத்­துறை அலு­வ­லர் பொறுப்பு வகிக்­கும் ராஜ பிரியா உட்­பட பல­ரும்,கலந்து கொண்­ட­னர்