நடிகை மீரா மிதுன் சில வருடங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் பட்டியலினத்தவர்கள் பற்றி மிகவும் மோசமாக பேசியதாக கைது செய்யப்பட்டார். அதன் பின் ஜாமினில் வெளிவந்த அவர் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் வராமல் தலைமறைவானார். மூன்று வருடங்களுக்கு பிறகு அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால் டெல்லியில் தலைமறைவாக இருந்த மீரா மிதுனை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் மீரா மிதுனை இன்னும் ஏன் சென்னைக்கு அழைத்து வரவில்லை என்கிற தகவலை போலீசார் தெரிவித்து இருக்கின்றனர். மீரா மிதுன் தற்போது மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும், அதனால் அவரை அழைத்து வர முடியவில்லை என போலீசார் தெறித்துள்ளனர்.






