“என் இதயம் கனத்துவிட்டது… கேரளா தனித்து விடப்படவில்லை வயநாட்டில் பிரதமர் மோடி

வய­நாடு:
“கேரளா தனித்து விடப்­ப­ட­வில்லை. வய­நாடு நிலச்­ச­ரி­வால் பாதிப்­பு­களுக்கு

சாத்­தி­ய­மானஅனைத்து உத­வி­களை­யும் மத்­திய அரசு செய்­யும்”

வயநாட்­டில் பிர­த­மர் நரேந்­திரமோடி உறுதி அளித்­துள்­ளார்.
கேர­ளா­வின் வய­நாடுமாவட்­டத்­தில் நிலச்­ச­ரி­வால் பாதிக்­கப்­பட்ட

பகு­தி­களை நேற்று (சனிக்­கி­ழமை) நேரில் பார்­வையிட்ட பிர­த­மர் நரேந்­திர
மோடி, வீடு­களை இழந்துமுகாம்­க­ளில் தங்­கி­யுள்ள மக்­களைச் சந்­தித்து

ஆறு­தல் தெரி­வித்­தார்.இத­னைய­டுத்து, பிர­த­மர் மோடி தலைமை­யில் ஆய்­வுக்
கூட்­டம் நடைபெற்­றது.இதில், கேரள ஆளு­நர்ஆரிப் முகம்­மது கான்,
முதல்­வர் பின­ராயி விஜயன், கேர­ளா­வைச் சேர்ந்த மத்­திய இணை அமைச்­சர்
சுரேஷ் கோபி உள்­ளிட்­டோர் கலந்து கொண்­டனர். இந்­தக் கூட்­டத்­தில்,
நிலச்­ச­ரி­வால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டிய நிவா­ரண

உத­வி­கள் குறித்து விரி­வாக விவா­திக்­கப்­பட்­டது.இந்­தக் கூட்­டத்­தில் பேசிய

பிர­த­மர் நரேந்­திரமோடி, “நிலச்­ச­ரி­வால் பாதிக்­கப்­பட்ட இடங்­களை நேரில்

பார்வை யிட்­ ட­போ­தும், பாதிக்­கப்­ பட்ட மக்­களை சந்­தித்­த போ­தும்என்இத­யம்

கனத்­து­விட்­டது. மறு­வாழ்­வுப்பணி­களை துரி­த­மாக மேற்கொள்ள வேண்­டிய
தரு­ணம் இது. கேரளாதனித்து விடப்­ப­ட ­வில்லை.ஒட்­டு­மொத்த தேசமும்

கேரள மக்­களோடு இருக்­கி­றது. சாத்­தி­ய­மான அனைத்துஉத­வி­களை­யும்
மத்­திய அரசு செய்­யும்.பாதிக்­கப்­பட்ட மக்­களுக்குநான்ஒன்றுசொல்ல விரும்­பு­கி­றேன்;

நீங்­கள்தனித்து விடப்­ப­ட­வில்லை. மத்­திய அர­சும் கேரள அர­சும் இணைந்து

வய­நடடை மீட்­டு­ரு­வாக்­கும் பணி­களை மேற்கொள்­ளும்.மறு­வாழ்­வுப்பணி­க­ளுக்கு
நிதி ஒரு­போ­தும் தடையாக இருக்­காது. மாநில அரசு முன்­வைக்­கும் அனைத்து

கோரிக்­கைகளை­யும் மத்­திய அரசுநிறைவேற்­றும்” என்று பிரத­மர் மோடி
தெரி­வித்­தார்.முன்­ன­தாக, கேர­ளா­வின் வய­நாடு மாவட்­டத்­தில் நிலச்­ச­ரி­வால்

பாதிக்­கப்­பட்ட பகு­தி­களை­யும்,பாதிக்க ப்பட்ட மக்­களை யும் பார்ப்­ப­தற்­காக

விமா­னம் மூலம் இன்று காலை கேர­ளா­வின் கண்­ணூர் விமான நிலை­யம் வந்த
பிர­த­மர் மோடி, பின்­னர் அங்­கி­ருந்து இந்­திய விமா­ னப்­படை­யின் ஹெலி­ காப்­டர்

மூலம் காலை 11.15 மணி­ய­ள­வில் வய­ நாடு புறப்­பட்­டார்.வய­நாடு மாவட்­டத்­தில்
நிலச்­ச­ரி­வால் பாதிக்­கப்­ பட்ட சூரல்­மாலா, முண் டக்கை, புஞ்­சி­ரி­மட்­டம்
ஆகிய கிரா­மங்­க­ளில்அவர் வான்­வழி ஆய்வு மேற்கொண்­டார். நிலச்­சரிவை

அடுத்து கல், மண் ஆகி­ய­வற்றோடு பெருக்­கெ­டுத்து ஓடிய இரு­வழிஞ்சி

ஆற்­றை­யும் பிர­தமர் மோடி பார்­வையிட்­டார். அப்­போது,ஒவ்­வொரு பகு­தி­யி­லும்
ஏற்­பட்ட பாதிப்­பின் தன்மை குறித்து பிர­த­மர் மோடிக்கு விளக்­கப்­ப ட்­டது.

மேலும்,பாதிப்­பு­கள் குறித்த புகைப்­ப­டங்­க ளை­யும் டேப் மூலம் பிர­தமர் மோடி

பார்த்­தார்.இத­னை­ய­டுத்து, தரை மார்க்­க­மா­க­வும் பாதிக்­கப்­ பட்ட பகு­தி­க­ளுக்கு

பிர­தமர் நரேந்­திர மோடி சென்­றார். வாக­னத்தை விட்டு பல பகு­தி­க­ளுக்­கும்நடந்து
சென்ற பிர­த­மர் மோடி,அங்கு நிலச்­ச­ரி­வால் ஏற்­பட்­டுள்ள பாதிப்­பு­களை நெருக்­க­மாக ஆய்வு செய்­தார்.அப்­போது, அங்கு ஏற்­ பட்ட பாதிப்­பு­கள் குறித்துபிர­த­ம­ருக்கு அதி­கா­ரி­கள் விளக்­கி­னர்.இந்த ஆய்வை அடுத்து,நிலச்­ச­ரி­வால் பாதிக்­கப்­பட்ட வர்­கள் தங்­கவைக்­கப்­பட்­டள்ள முகாம்­களுக்கு பிர­த­மர் மோடி சென்­றார். அங்கு பாதிக்­கப்­பட்ட மக்­களைச் சந்­தித்து அவர்­க­ளின் குறைகளைக்

கேட்­ட­றிந்தார்.அவர்­க­ளுக்கு ஆறு­தல் தெரி­வித்­தார்.
பாதிக்­கப்­பட்ட மக்­களில் சிலர் தங்­கள் குறை களை கண்­கலங்­கி­ய­வாறு
கூறி­ய­தைக் கேட்ட பிர­தமர், அவர்­க­ளின் தோல்­க ளில் தட்­டிக் கொடுத்து
ஆறு­தல் தெரி­வித்­தார்.இத­ னைத் தொடர்ந்து நிலச்­ச­ரி­ வால் பாதிக்­கப்­பட்டு
ம ரு த் ­து ­வ ­ம ­னை ­யி ல் சிகிச்சை பெற்று வரு­ப­வர்­ களை பிர­த­மர் சந்­தித்து,
அவர்­க­ளுக்கு ஆறு­தல்தெ ரி ­வி த்­தா ர் .பிர­த­ம­ரு­டன் கேரள ஆளு­நர்

ஆரிப் முக­மது கான்,முதல்­வர் பின­ராயி விஜயன், மத்­திய சுற்­றுலா மற்­றும் பெட்­ரோ­லி­யம் மற்­றும் இயற்கை எரி­வாயு துறை இணை அமைச்­சர் சுரேஷ் கோபி ஆகி­யோர்உடன் சென்­ற­னர்.பேரி­டர் பாதித்த பகு­தி­யில்

மறு­வாழ்வு மற்­றும் நிவா­ர­ணப் பணி­களை முழு­வீச்­சில் மேற்கொள்ளமத்­திய அர­சி­டம் கேரளஅரசு ரூ.2,000 கோடி நிதி­யு­தவி கோரி இருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது.