அகில இந்திய சட்ட உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்புக் கழகத்தின் தலைவர் புரட்சிவி.எஸ்.நாகமூர்த்தி தமிழக முதலமைச்சருக்கு வேண்டுகோள்!!
சென்னை, ஆக.01-தமிழகத்தில் தீவிரமாகி வரும் தீண்டாமைவன் கொடுமைகள், ஜாதிவெறி ஆணவப் படுகொலைகள் தொடராமல் தடுக்க தனிசட்டம் இயற்ற வேண்டுமென, அகிலஇந்திய சட்ட உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்புக் கழகத்தின் தலைவர் புரட்சி வி.எஸ். நாகமூர்த்தி, தமிழக முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.கடந்த 27ம் தேதி கவின் செல்வகணேஷ் (27) என்பவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பாளையங்கோட்டை காவல் நிலையத் தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கில் தொடர்புடைய பாளையங்கோட்டை, கே.டி. சி.நகர், மங்கம்மாள் சாலையைச் சேர்ந்த சுர்ஜித்(23) கைது செய்யப் பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத் தப்பட்டார். இந்நிலையில் மேற்சொன்னவழக்கில் சம்பந்தப்பட்ட, பட்டது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்ட சுர்ஜித்தை, திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி, குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் தடுப்புக் காவலில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். இதில் முதற்கட்டவிசாரணையில் கொலைசெய்யப்பட்டவரும், குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித்தின் சகோதரியும் பழகி வந்த நிலையில், இது தொடர்பான பிரச்னையில் இந்த கொலை நடந்துள்ளதாக காவல்துறைசார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.மேலும்,பாளையங் கோட்டையில் தலித் சமூகத்தை சேர்ந்த கவின்செல்வ கணேஷ் படுகொலை செய்யப்பட்ட விவகார த்தில் குற்றஞ்சாட்டப்பட்ட சுர்ஜித் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்குபதிவு செய்யப்பட்ட நிலையில் அவரது பெற்றோர் இருவரும் காவல்துறையில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தை மற்றும் தாய்சார்பு ஆய்வாளர் என்பதால் விசாரணை பாரபட்சமின்றி நடக்க இருவரும்பணி இடை நீக்கம் செய்யப்பட்டு இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,தமிழகத்தில் தொடர்ந்து தீவிரமாகிவரும் தீண்டாமைவன் கொடுமைகள், ஜாதி
வெறி ஆணவப் படுகொலைகள் தொடராமல் தடுக்க கடுமையான தனிசட்டம் இயற்ற வேண்டும்
என்று அகில இந்தியசட்ட உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்புக் கழகத் தின் தலைவர் புரட்சி வி.எஸ்.நாகமூர்த்தி,தனதுஅறிக்கையில் தமிழகமுதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.






