மார்த்தாண்டம் ஜூலை 26 – மார்த்தாண்டத்தில் போக்கு வரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இரண்டரை மணி நேரம் பஸ் போக்குவரத்துபாதிக்கப்பட்டது கன்னியாகுமரி மாவட் டம் சாமியார் மடம் கஞ்சி மடத்தைச் சேர்ந்த ஸ்டாலின் மகன் அஜித் (16) இவர் பிளஸ் ஒன் படித்து வருகிறார். இவரது நண்பர்கள் தேங்காப் பட்டணம் பகுதி முகமது அலி மகன் அப்சல் (17). இவர் பிளஸ் டூ படித்து வருகிறார். தேங்காபட்டணத்தைச் சேர்ந்த ஷேக்முகை தீன் மகன் அஜ்மல்(16) பிளஸ் ஒன் படித்து வருகிறார் சாமியார் மடத்தைச் சேர்ந்த நசீர் மகன்நாசில் (15) இவர் பிளஸ் ஒன் படித்து வருகிறார். நான்கு பேரும் நேற்று முன் தினம் இரவு குழித்துறை வாவுபலிபொருட்காட்சிக் கு சென்றனர் இரவு 10 மணிக்கு பதிவு எண் தெரியாத ஒரு ஸ்கூட்டரில் நான்கு பேரும் சென்றனர். அப்சல் ஸ்கூட்டரை ஓட்ட அவருக்கு பின்னால் அஜ்மலும்,அதன் பின்னால் நாசிலும், அதன் பின்னால் அஜித்தும் உட்கார்ந்திருந்தனர். மார்த்தாண்டம் கல்லுத் தொட்டி அருகே செல்லும் போது நாகர்கோ விலில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி வந்த பஸ் மீது மோதியது. இதில் அப்சல் சம்பவ இடத்திலே பலியானார்.அஜ்மல் நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரி கொண்டு செல்லப் பட்டு சிகிச்சை பலனில்லா மல் அங்குவைத்து பலியானார். அஜித்தும், நாசிலும் படுகாயம் அடைந்தனர் இவர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின் றனர்.அஜித்கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் பஸ் டிரைவர் விழுந்தம் பலத்தைச்சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். போக்கு வரத்து தொழிலாளர்கள் சார்பில் இந்த விபத்துக்கு டிரைவர் காரணம் இல்லை . சிறுவர் கள் தான் பஸ் மீது வந்து விழுந்த னர் என தெரிவித்தனர். இதனால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் என வலியு றுத்தினர். ஆனால் எந்த நடவடிக் கை எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து போக்கு வரத்து தொழி லாளர்கள் யூனியன் சார்பில் சம்பந் தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத் தியும் டிரைவர் மீதுபதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தியும் நேற்று பிற்பகல் 12 மணி முதல் பஸ்களை மார்த்தாண்ட பஸ் ஸ்டாண்டில் நிறுத்தி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்ட் முழுவதும் நிரம்பி யது. அதனை தொடர்ந்து வந்த பஸ்கள் மார்த்தாண்டம் மார்க்கெட் ரோட்டில் ரோட்டில் வரிசையாக நிறுத்தி வைக்கப் பட்டது.மார்த் தாண்டம் மேம்பாலம் வரையும் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மறுபுறம் விரிகோடு வரையும் பஸ்கள் வரிசையாக நின்றது. போக்கு வரத்து முழுமையாக தடை பட்டது . இதனைத் தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர் அனைவரும் ஒன்று சேர்ந்து மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்ட் முன் பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடு பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மார்த்தாண்டம் இன்ஸ் பெக்டர் வேளாங்கண்ணி உதய ரேகா பேச்சு வார்த்தை நடத்தினார் எந்த முடிவும் வராதது தொடர்ந்து, தக்கலை டிஎஸ்பி பார்த்திபன் வருகை தந்து பேச்சு வார்த்தை நடத்தினார். சம்பந்தப் பட்டவர் மீது வழக்குப் பதிவு செய்யலாம் என உத்தவாதம் கொடுத்தார். ஆனால் போக்கு வரத்துதொழிலாளர்கள் மறுப்பு தெரிவித்தனர். வழக்கு பதிவு செய்த பிறகு பஸ்களை எடுப்பதாக தெரிவித்தனர். இரு தரப்பிலும் கடுமையான வாக்கு வாதம் நடைபெற்றது. சம்பந்தப் பட்டவர் மீது வழக்குப் பதிவு செய்யலாம் இல்லையேல் மீண்டும் போராட்டம் நடத்தப் படும் என ஒரு வழியாக முடிவுக்கு வந்ததை தொடர்ந்து பிற்பகல் 2.30 மணி முதல் பஸ்கள் இயங்கத்து வங்கி யது. இரண்டரை மணி நேரம் மார்த்தாண்டம் ஸ்தம்பித்தது. சி ஐ டி யுயூனியன் சார்பில் சுரேஷ்குமார், பி எம் எஸ் யூனியன் சார்பில் சதீஷ், ஏ டி பி யூனியன் சார்பில் பிரதீஷ், ஐஎன்டிசியூ னியன் சார்பில் எட்வின், எல் பி எப் யூனியன் சார்பில் சதீஷ் சிங்,ஹெச் எம் எஸ் யூனி யன் சார்பில் முத்துக்கருப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காக்கி யூனி ஃபாமு டன் டிரைவர்களும், கண்டக்டர்கள் டிக்கெட் மற்றும் கலெக்சன் பேக் உடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்த்தாண்டம் போக்குவரத்து கழக கிளை மோனஜர் ஸ்டாலின், குழித் துறை கிளை மேனேஜர்கள் ஜெபின், சுந்தர்சிங்,திருவட்டாறு கிளை மேனேஜர் அனீஸ் ஆகியோர் இவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். பிற்பகல் 2.30 மணிக்கு போராட்ட முடிவுக்கு வந்தது பின் டிரைவர் ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில் சிறுவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மார்த்தாண்டத்தில் விபத்து எதிரொலி; போக்கு வரத்து தொழிலாளர்கள்!போராட்டம் – இரண்டரை மணி நேரம் பஸ் போக்கு வரத்து பாதிப்பு!






