தேர்தல் ஆணையத்திற்கு டாக்டர் ராமதாஸ் கடிதம்!

தேர்தல் ஆணையத்திற்கு டாக்டர் ராமதாஸ் கடிதம்!
அன்புமணியின் பதவிக்காலம் முடிந்து விட்டதாகவும் தகவல்!!
சென்னை, ஜூலை. 09–
பா.ம.க. நிறுவனர் டாக்­டர்ராமதாஸ், தேர்­தல் ஆணையத்திற்கு கடிதம்
எழுதியுள்­ளார். அதில்பா.ம.க.வுக்கு நானே தலைவர்; அன்புமணிஅல்ல
என்று குறிப்பிட்டுள்­ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்­டர் ராமதா சுக்கும், அவரது மகன் அன்பு மணிக்கும் இடையே மோதல் நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டே வருகிறது.இருவரும் தற்­போது எதி­ரெ­திர் துருவங்­க­ளாக செயல்­பட்டு வருகி­றார்­கள். அடுத்­த­டுத்து போட்டிக்கூட்­டங்­களை நடத்தி வரு­கின்­றனர். ஒருவரின் ஆதர­வாளர்­களை மற்­றவர் நீக்கி வருகின்­றார்­கள். அதனால் உண்­மை­யான பா.ம.க.யாரு­டைய கட்டுப்­பாட்­டில் உள்­ளது என்­பது தெரி­யாமல் தொண்­டர்­கள் குழப்­பத்தில் உள்­ளார்­கள்.பா.ம.க. தலைவராக
அன்புமணி செயல்­பட்டு வந்­தார். மோதல் ஏற்­பட்­டதை அடுத்து அவரை அப்­ப­தவியில் இருந்து டாக்­டர் ராமதாஸ் நீக்கி விட்டு செயல்­ த­லைவர் என்ற அந்­தஸ்த் துக்கு கீழே இறக்கினார்.ஆனால் கட்சியின் நிறு­வனருக்கு இது போன்ற நடவடிக்கை எடுக்க
அதிகா­ரம் இல்லை என்றும், பொதுக்குழுவுக்குத் தான் அனைத்து அதிகா­ரமும் இருப்­ப­தா­கவும் அன்புமணி கூறி­னார். ஆனால் கட்சியை தோற்­றுவித்­தது
நான்; எனக்கே அனைத்து அதிகா­ர­மும் உள்­ளது;நான் சொல்­வ­து­தான் சட்­டம்; நான் அறிவிப்­ப­வர் தான் அதிகா­ரப் பூர்வவேட்­பா­ளர்­கள் என்று ராம­தாஸ் பதிலடி கொடுத்­தார். அது­ மட்டுமல்­லாது இரு தலை
வர்­க­ளும் மாவட்ட அளவில் தலை­வர்­களை சந்­திக்­கத் தொடங்­கி­னார்
கள். இந்த விவகா­ரத்திலும் இருவ ருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்­பட்­டது. ஆகவே கட்சியை
முழு­மை­யாக கட்டுப்­பாட்­டுக்குள் கொண்­டுவருவ­தற்­காக அன்­புமணி ராம­தாஸ் டெல்லிக்கு சென்­ற­தா­கவுத் தெரிவிக்­கப்­பட்­டது. இப்­ப­டிப்
பட்ட நிலை­யில் அன்­பும­ணியை பா.ம.க. நிர்­வா­கக்குழுவில் இருந்து ராம­தாஸ் நீக்கி­னார். நேற்று திண்­டிவ­னம் அருகேஉள்ள ஓமந்­தூரில் நிர்­வாகக் குழு மற்­றும் செயற்குழு கூட்­டத்தை நடத்தி­னார்.இந்த கூட்­டத்தில் சேலம் மேற்­குத் தொகுதி எம்.
எல்.ஏ. அருள் உள்­பட பல தலை­வர்­கள் கலந்து கொண்­டார்­கள். ராம­தா
சின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி மற்­றும் பேரன் முகுந்­தன் ஆகி­யோ­ரும் இந்­தக்கூட்­டத்தில் கலந்து கொண்­டனர். இந்த கூட்­டத்தில் பல தீர்­மா­னங்­கள் நிறை­வேற்றப்­பட்­டன. அந்த கூட்­டத்­தில் ராம­தாஸ் பேசு­கையில், எனது மன வேதனை அனைத்து உறுப்­பி­னர்­களுக்கும் தெரியும்.
தேர்­தலில் பா.ம.க. கூட்­டணி அமைத்துப்போட்டி­யிடும். வேட்­பா­ளர்­களை தேர்வு செய்­யும் அதிகா­ரம்
எனக்கே உள்­ளது. வேட்புமனு தொடர்­பான ஏ. மற்றும் பி. படிவத்தில் கையெழுத்திடும் அதிகா­ர­மும் எனக்கே உள்­ளது என்று தெரிவித்­தார்.இப்­ப­டிப்­பட்ட நிலையில் அவர்தேர்­தல் ஆணை
யத்திற்கு கடி­தம் எழுதியி­ருப்­ப­தாக
தெரியவருகிறது. அதில் அவர் கூறியிருப்­ப­தா­வது:–அன்­பு மணி யின் தலைவர்பத­விக் காலம் மே 28–
ஆம் தேதியுடன் முடிவ­டைந்து விட்­டது. மே 29முதல் நானே தலை­வ­ராக
செயல்­பட்டு வருகி­றேன்.அன்­பு மணியின் செயல்­ பாடு சரியாக இல்­லா­ததால் அவர் செயற்­த­லைவர் என்ற பத­வியில் நியமிக்­கப்­பட்டுள்­ளார்.எனக்கு ஆத­ர­வாக 1,413 செயற்­குழு உறுப்­பி­னர்­க­ளும், 21 பொதுக்குழு உறுப்­பி­னர்­க­ளும்
கையெ­ழுத்திட்டுள்­ளார்கள். அவர்­க­ளு­டைய புகைப்­ப­டங்­க­ளையும்
ஒட்டியுள்­ள­னர்.இவ்­வாறு டாக்­டர் ராம­தாஸ் தெரிவித்திருப்­ப­தாகக் கூறப்­ப­டுகிறது.