புதுடெல்லி, செப்.19 நாடு முழுவதும் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் பிரதமர் மோடி உறுதியாக இருக்கிறார்.வெவ்வேறு நேரங்களில் தேர்தல் நடப்பதால், வளர்ச்சிபணிகள் பாதிக்கப்படு வத கவும் ,தேர்தல் செலவு அதிகரிப்பதாகவும் அவர் கருதுகிறார்.’ஒரே நாடு, ஒரேதேர்தல்’ என்றஇந்த திட்டத்தை அமல் படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒருஉயர்மட்டக்குழுவை மத்தியஅரசு அமைத்திருந்தது.இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை அமைச்சரவை ஏற்றுக்கொண்டதாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.இதன்படி ராம்நாத் கோவிந்த் குழுவின் பரிந்துரைகளுக்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.எதிர் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இது மசோதாவாக தாக்கல் செய்யப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 3வது ஆட்சியின் 100 நாட்கள் நிறைவடைந்திருப்பதை கொண்டாடும் விதமாக, ‘ஒரேநாடு ஒரே தேர்தல்’திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.






