முதல்வர்உத்தரவு
கடலூர் மாவட்டம்,குறிஞ்சிப்பாடி
வட்டம், வடலூர், பார்வதிபுரம் கிராமத்திலுள்ள ஏரியில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமச்
சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
“கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூர், பார்வதிபுரம் கிரா
மம், சவேரியார் நகரைச் சேர்ந்த வின்சென்ட் அமல்ராஜ் அந்தோணி
என்பவரின் மகன் அப்டியல் டெவின் ரோஜர் (வயது 17) என்பவர்
நேற்று முன் தினம் (14.6.2025)மாலை
சுமார் 5.00 மணியளவில் பார்வதிபுரம் கிராமத்திலுள்ள வெங்கலத்து ஏரியில் நண்பர்களுடன்குளிக்கச் சென்ற போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக்கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும்
அடைந்தேன்.மேலும்,இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தி
னரு க்கும், அவர்களது உறவினர்க ளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு,உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம்
ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கி
டவும் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
கடலூர் அருகே ஏரியில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி






