கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சுற்றுலா வளர்ச்சி மேம்பாட்டு பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வ

கன்­னியாகுமரி நவ23, கன்னியாகுமரி பேரூராட்சிக்­குட்­பட்ட திரி­வேணி சங்­க­மம், சுனாமி பூங்கா,முக்­கோண பூங்கா, உள்ளிட்ட பகுதி­களில் நடை­பெற்று வரும் சீர­மைப்பு பணி­களை மாவட்ட ஆட்சித்­த­லை­வர் ஆர்.அழகுமீனா (21.11.2024) அன்று நேரில்பார்­வை­யிட்டு ஆய்வு மேற்­கொண்டு தெரிவிக்­கை­யில்-கன்னியாகுமரி சுற்றுலா தளத்­தினை உலக தரத்­திற்கு உயர்த்­தும் வகை­யில் பல்­வேறு மேம்­பாட்டு பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதி­யாக மாற்றுத்­திறனாளி­க­ளும் கன்னியாகுமரி கடலின் எழி­லைக் கண்டு­க­ளிக்­கும் வகை­யில் காந்தி மண்­ட­பம் முதல் திரி­வேணி சங்­க­மம் பகுதி வரைசாய்வு தள சாலை அமைக்­க­பட்டு பாது­காப்பு அரண்­க­ளும் அமைக்­கப்­பட்டுள்­ளது. கடற்­க­ரைக்கு வரும் சுற்றுலா பயணி­கள் கடல் அலை­களை கண்டு ரசிக்­கும்விதமாக அவர்­க­ளுக்கு கடற்­கரை பகுதி­யில் இருக்­கை­கள் அமைக்­கப்­பட்டுள்­ளது. மேலும் பழுதடைந்த இருக்­கை­கள் சீர­மைக்­கப்­பட்டு மெருகூட்­டப்பட்டுள்­ளது.திரி­வேணிசங்­கம் முன்­ப­குதியில்அமைந்துள்ள சுனாமி பூங்­கா­வில் சுற்­றுலா பயணி­கள் இளை­பாறும் வகை­யில்,அங்­குள்ள புதர்­கள் அகற்றி, சுத்­தப்­ப­டுத்தி புதிய மரக்­கன்று­கள், செடி வகை­கள் நடப்பட்டுள்­ள­தோடு, சுனாமி நினைவு சின்­னத்தை சீர­மைத்து வர்­ணம் பூசி மெரு­கேற்­றப்­பட்டுள்­ளது.மேலும் சுற்றுச்சுவர்­க­ளில் உள்ள பழுது­கள் நீங்கி,வெள்ளை அடிக்­கப்­பட்டு புது பொலிவு­டன் சீர­மைக்­க­பட்டுள்­ளது. சுனாமி பூங்காவில் கழிப்­ப­றை­கள் சுத்­த­மா­க­வும், சுகா­தாரமா­க­வும் பாரமரித்­திட துறை சார்ந்த அலுவலர்­க­ளுக்கு அறிவுறுத்­தப்பட்டுள்­ளது.மேலும் சுற்றுலாபயணி­க­ளின் நலனுக்காக திரி­வேணி சங்­க­மம் கடற்­கரை பகுதி­கள் சாலை­கள், பூங்­காக்­கள், சூரியன் உத­யம் பார்­வை­யிடும் பகுதி உள்ளிட்டபேரூராட்சிக்­குட்­பட்ட பகுதி­க­ளில் காலை முதல் இரவு வரை சுழற்சி துறையில் தூய்மை பணி­கள் மேற்­கொள்­ளப்பட்டு வருகிறது. தெருமின் விளக்கு வசதி­கள், சுத்­தி­க­ரிக்­கப்­பட்ட குடிநீர் வச­தி­கள்,ஆண், பெண் இருபாலாருக்­கும் மற்றும் மாற்றுத்­திறனாளி­க­ளுக்­கான கழிப்­பறை வச­தி­கள், கடலில் குளிக்­கும் பக்­தர்­கள் மற்றும் சுற்றுலா பயணி­க­ளுக்கு இலவசஉடை மாற்றும் அறை வசதி, பாலூட்டும் தாய்­மார்­க­ளுக்­கான அறை, கடலில் குளிக்கும் சுற்றுலா பயணி­க­ளின் பாது­காப்பினை உறுதி செய்யகல் படிக்­கட்டு­க­ளில் தின­சரி காலை, மாலை வேளை­க­ளில்பாசி­களை கழுவி சுத்­தம் செய்யும் பணி­கள் அனைத்­தும் மேற்­கொள்­ளப்­பட்டு வருகிறது. இப்­ப­ணி­களை தொடர்ந்து மேற்­கொள்ள வேண்டு­மென துறைசார்ந்த அலுவலர்­க­ளுக்­கும், பணியாளர்­களுக்­கும் அறிவுறுத்­தப்­பட்டுள்­ளது. எனமாவட்ட ஆட்சித்­த­லை­வர் ஆர்.அழகு­மீனா கேட்டுக்­கொள்கிறார்.நடை­பெற்ற ஆய்வில் மாவட்ட சுற்­றுலா அலுவலர் காமராஜ், பேரூராட்சி­கள்உதவி செயற்­பொ­றியாளர் மாரிமுத்து,துறை அலுவலர்­கள், பணியாளர்­கள் உட்­பட பலர் கலந்து கொண்­ட­னர்.