மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சஷ்டி விரதம் தொடக்கம்!

மதுரை நவம்­பர் 3,மதுரை திருப்­ப­ரங்­குன்­றம் சுப்­பி­ர­ம­ணிய சுவாமி கோயி­லில் ஆண்­டு­ தோறும் ஐப்­பசி மாதம் கந்தசஷ்டி விழா 7 நாட்­கள் கொண்­டாடப்­ப­டும்.இந்த ஆண்­டிற்­கான விழா நேற்று காலை 8 மணிக்கு யாக­சாலை பூஜைகள் நடைபெற்று, உற்­சவர் சன்­ன­தி­யில் உற்­சவர் சுப்­பி­ர­ம­ணிய சுவாமி, தெய்­வானை,சண்­மு­கர் சன்­ன­தி­யில் சண்­மு­கப் பெரு­மான் வள்ளி, தெய்­வானை, உற்சவ நம்­பி­யார்க்­கும் காப்­புக்­கட்­டும் நிகழ்ச்சி நடைபெற்­றது.பின்­னர் காப்பு கட்­டிய ஆயி­ரக்­கணக்­கான பக்­தர்­கள்  பால்,மிளகு, துளசி ஆகி­ய­வற்றை ஒரு­ வேளை மட்­டுமே உணவு உண்டுவரு­வார்­கள். திரு­வி­ழா­வின் முக்­கிய நிகழ்ச்­சிக­ளில்­ ஒன்­றான சூர­பத்­மனை அழிக்­கும் நிகழ்வு 7 ம் தேதி மாலை 6.30 சன்­னதி தெரு­வில் உள்ளசொக்­க நா­தர் கோயில் முன் நடைபெ­றும்.கோவில் நிர்­வாகம் சார்­பில் பக்­தர்­க­ளுக்கு தங்­கு­வதற்கு வச­தி­யாக கோவில் வளா­கத்­தில் மின்­வி­ளக்கு, மின்­வி­சிறி, பந்­தல் மற்­றும் குடி­நீர்  வச­தி­கள் செய்­யபட்­டி­ருந்­து.