திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது.

திருச்­செந்­தூர்

திருச்­செந்­தூர் சுப்­பி­ர­ம­ணியசுவாமி கோவி­லில் கந்­த­சஷ்டி திரு­விழா 02.11.24 அன்று தொடங்கி­யது. இதையொட்டி அதி­காலை 1 மணிக்கு கோவில் நடை திறக்­கப்­பட்டு, 1.30 மணிக்கு விஸ்­வ­ரூப தீபா­ரா­தனை, 2மணிக்கு உதய மார்த்தாண்ட அபி­ஷேகம் நடைபெற்­றது.5.30 மணிக்கு மேல் 6மணிக்­குள் சுவாமி ஜெயந்­தி­  நா­தர்யாக­ சா­லைக்குஎழுந்­த­ரு­ளி­னார். காலை 7மணிக்கு யாக­சாலை பூஜை­யு­டன் கந்­த­சஷ்டி திரு­விழா தொடங்­கி­யது.காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்­சி­கால அபி­ஷேகமும்,தீபா­ரா­த­னை­யும்,பகல் 12 மணிக்கு யாக­சா­லை­யில் தீபா­ரா­த­னை­யும் நடைபெற்­றது.பின்­னர் சுவாமி ஜெயந்­தி­நா­தர் வள்ளி தெய்­வானை­யு­டன் தங்­கச்­சப்­ப­ரத்தில் சண்­மு­க­வி­லாச மண்­டபத்­திற்கு எழுந்­த­ரு­ளி­னார். அங்கு சுவா­மிக்கு மகாதீபா­ரா­த­னை­யும். மாலை3.30 மணிக்கு மூலவ­ருக்கு சாய­ரட்சை தீபா­ரா­தனை நடைபெற்­றது.பின்­னர் சுவாமி ஜெயந்­தி­நா­தர், வள்­ளி தெய்­வா­னையுடன் திரு­வா­வ­டு­துறைஆதீன சஷ்டி மண்­டபத்திற்கு அம்­பாள்களுக்கு பல்­வேறு திர­வி­யங்­க­ளால் அபி­ஷேகம் அலங்­கா­ரமாகி தீபா­ரா­தனை நடைபெற்­றது. தொடர்ந்து சுவாமி, அம்­பாள்­க­ளு­டன் தங்க தேரில் எழுந்­த­ருளி கிரி வீதி­யில் பவனி வந்து பக்­தர்­களுக்கு காட்சி  கொடுக்­கி­றார். ­ 6 ம் திரு­நா­ளான வரு­கிற 7ந் தேதி (வியா­ழக்­கி­ழமை ) மாலை 4.30 மணிக்கு கடற்­கரை  ­யில் சுவாமி ஜெயந்­தி­நா­தர்,சூர­பத்­மனை வதம் செய்­யும் சூர­சம்­ஹா­ரம் நிகழ்ச்சி நடக்­கி­றது. 7ம் திரு­நா­ளான 8ந் தேதி(வெள்­ளிக்­கி­ழமை ) இரவு 11 மணிக்கு மேல் சுவாமி கும­ர­வி­டங்க பெரு­மா­னுக்­கும், தெய்­வானை அம்­பா­ளுக்­கும் வைதீக முறைப்படி திருக்­ கல்­யாணம்  நிகழ்ச்சி நடக்­கி­றது. கந்த சஷ்டி விழா 02.11.24 இன்று தொடங்கி­யதை­ யொட்டி நேற்று காலை முதலே பக்­தர்­கள் அங்கு குவிந்து வரு­கி­றார்­கள். நெல்லை,தூத்­துக்­குடி மட்­டு­மின்றி தமி­ழகத்­தின்பல்­வேறு பகு­தி­க­ளில் இருந்­தும் பக்­தர்­கள் வரத் தொடங்­கி­னர். தற்­கா­லிககுடில்­க­ளி­லும்,கோவி­லுக்கு சொந்­த­மான விடு­தி­கள், தனி­யார் விடு­தி­கள்,திருச்­செந்­தூர் பகு­தி­க­ளில் உள்ள மடங்­க­ளி­லும் பல்­லா­யி­ரக் கணக்­கான பக்­தர்­கள் தங்கி உள்­ள­னர்.அவர்­கள் கடற்­கரை­யி­லும், நாழிக்­கி­ணற்­றி­லும்புனித நீராடி விர­தத்தைதொடங்கிஉள்­ள­னர். சஷ்டி திருவிழா­வை ­யொட்டிநடைபெ­றும் தின­மும் 1லட்­சம் பக்­தர்­கள் வரு­வார்­கள் என கோவில் நிர்­வாகம் சார்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதையொட்டி பக்­தர்­களுக்­காக தற்­கா­லிக கழிப்­ப­றைகள், குடி­நீர்வசதி,தற்கா­லிக பஸ்நிறுத்­தும் இடம் உள்­ளிட்ட பல்­வேறு வச­தி­கள் ஏற்­ப­டுத்தப்­பட்டு உள்­ளது.மேலும் கோவில் நிர்­வாகம்,மாவட்டநிர்­வாகம்,சுகா­தா­ரத்­துறை,தீயணப்பு துறைமற்­றும் உள்­ளாட்சிதுறை சார்­பி­லும் முன்­னேற்­பாடு பணி­கள் செய்­யப்­பட்டு உள்­ளன.காவல்­துறை சார்­பில் சுமார் 2 ஆயி­ரம் போலீ­சார் பாது­காப்பு பணி­யில் ஈடு­படுத்­தப்­பட்­டுள்­ள­னர்.