பொள்ளாச்சி:அக்-26 பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆழியாறு கவியருவி தமிழகத்தின் முக்கிய சுற்றுலாதலங்களில் ஒன்றாகும்.இங்கு பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து அருவியல் குளித்துச் செல்வது வாடிக்கை. இந்நிலையில் வட கிழக்கு பருவமழை துவங்கியதால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்தது.இதன் காரணமாக ஆழியாறு கவியருவியில் காற்றாற்று வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது.இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவியல் குளிக்க தற்காலிக தடை விதித்தது வனத்துறை. தற்போது மழைபொழிவு குறைந்ததன் காரணமாக அருவிக்கு வரும் நீரின் அளவு சீரானதை தொடர்ந்து வனத்துறையால் விதிக்கப்பட்ட தற்காலிக தடை நீக்கப்பட்டது,நான்கு நாட்களுக்குப்பிறகு சுற்றுலா பயணிகள் கவியருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் இட்டு மகிழ்ந்தனர்.
நான்கு நாட்களுக்குப் பின்பு ஆழியாறு கவியருவியில் அனுமதி சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்






