நாகர்கோவில்,-ஜூன்.24 போக்சோ வழக்கு குறித்த விழிப்புணர்வு ஆரல்வாய் மொழியில் நடை பெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்சோ குற்றஙகள் இல்லாத கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்கும் பொருட்டு “நிமிர்” குழுவினர் சூறாவளி பிரச்சாரத்தில் தினமும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஸ்டாலின் அவர்கள் அறிமுகபடுத்திய நிமிர் என்ற போக்சோ சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பில் தலைமை காவலர்கள் ஜெயந்தி,சுயம்புமஞ்சு மற்றும் ஆஷாபிரியா ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சென்று அவர்களிடம் போக்சோ வழக்கு குறித்த சட்டவிழிப்புணர்வை ஏற்படுத்தி பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.






