பாராளுமன்ற நிதி மூலம் நாகர்கோவில் மாநகர் பகுதிகளில் பல்வேறு பணிகளுக்கு விஜய் வசந்த் எம்.பி அடிக்கல் நாட்டி, புதிய கட்டிடங்களை திறந்து வைப்பு!

நாகர்­கோ­வில் அக் 15, கன்­னியா­குமரி மாவட்­டம் நாகர்­கோ­வில் மாந­கராட்சிக்கு உட்­பட்ட பல்­வேறு பகுதி­க­ளில் நடை­பெ­ரும் பணி­க­ளுக்கு பாரா­ளுமன்ற நிதி ஒதுக்கி கன்­னியா­குமரி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர் விஜய்­வசந்த் நேற்று அடிக்­கல் நாட்­டி­னார்.நாகர்­கோ­வில் மாந­கராட்சிக்கு உட்­பட்ட 44வது வார்டு சென்ன வண்ணான் விளை­யில் ரூ. 13லட்­சம் மதிப்­பில் புதிதாக அங்­கன்­வாடி கட்டிடம் ,பட்­ட­க­சா­லியன் விளையில் ரூ. 3 லட்­சம் மதிப்­பில் புதிதாக ஆழ்­துளை குடிநீர்கிணறு மற்றும் மின்மோட்­டார் அமைப்­ப­தற்கும் அடிக்­கல் நாட்டி­னார்.அடுத்து வார்டு எண் 33க்கு உட்­பட்ட குரு­சடி ஊருக்கு ரூபாய் 4 லட்­சம் மதிப்­பில் பயணி­கள் நிழற்­குடை அமைக்­கவும் அடிக்­கல் நாட்டி­னார். அடுத்து வார்டு எண் 32 வடக்கு கோணத்தில் ரூபாய் 10லட்­சம் நிதி ஒதுக்கி ஆற்­றுப் பாலம் அமைக்க அடிக்­கல் நாட்டி­னார் அதனை தொடர்ந்து 37வது வார்டு வடலிவிளை அரசு உயர்நி­லைப் ­பள்ளிக்கு ரூ. 18 லட்­சம் மதிப்பில் கட்­டப்­பட்ட புதிய கட்டித்தை கன்­னியா­குமரி பாரா­ளுமன்ற உறுப்­பி­னர் விஜய் வசந்த் திறந்து வைத்­தார்.இந்நி­கழ்ச்சியில் குமரிகிழக்கு மாவட்ட திமுக செய­லா­ள­ரும் மேயரு­மான ரெ. மகேஷ், துணைமேயர் மேரி பிரின்ஸிலதா, மாவட்ட காங்­கி­ரஸ் தலைவர் நாகர்­கோ­யில் மாந­க­ரம், மற்றும் மாந­கராட்சி 44 வது வார்டு மாமன்ற உறுப்­பி­னர் வழக்­க­றிஞர் ஜெ.எஸ் . நவீன்­கு­மார், மண்­டல தலைவர் ஜவ­ஹர், தலை­மைச்செயற்குழு உறுப்­பி­னர் சதா­சிவன் , மற்றும் காங்­கி­ரஸ்கட்சி நிர்­வா­கி­கள் முரு­கேஷ் , சந்தி­ர­சே­கர், தங்­க­ராஜ் , பாபு, ராதா­கிருஷ்­ணன், அன்­ப­ரசன், தங்­கதுரை, முரு­கன்,நடே­சன்,ஜெயபால்,மணி­கண்­டன், ஐயப்­பன், கோபால், ரதன் , ரவிக்கு­மார்,செந்தில்குமார்,ஹரிஷ் லிங்­கேஸ்­வ­ரன்,சுதன், உட்­பட ஏரா­ள­மான பொதுமக்­கள் கலந்து கொண்­ட­னர்.