தஞ்சை,அக்-10அரசு போக்கு வரத்து கழக ஏஐடியூசி தொழிலாளர் சம்மேளனத்தின் மாநிலபொதுச் செயலாளர் ஆர் ஆறுமுகம், மாநிலத் துணைத்தலைவர் துரை . மதிவாணன் ஆகியோர் விடுக்கும் அறிக்கை. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் சுமார் ஒரு லட்சத்து, 2 0- ஆயிரம் தொழி லாளர்கள்,பணியாளர்கள்,அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.தொழிலாளர்களின் அயராத உழைப்பினால் இந்தியாவிலேயே தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பகல், இரவு, முழுவதும், 24-ம ணி நேரபயண சேவையை அனைத்து மாவட்டங்களுக்கும்,கிராமங்களுக்கும் , செய்து வருகிறது. டீசல்சேமிப்பு , வருவாய் பெருக்கம்,. பயணிகள் ஏற்றி இறக்குதல், அதிக கிலோ மீட்டர் தூரம் ஓட்டுதல், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தொடர்ந்து தமிழ்நாடுஅரசு போக்கு வரத்துக்கழகம் விருதுகள் பெற்று வருகிறது. சட்டத்தில் 8- மணி நேர வேலை என்பது உள்ளது . ஆனால் தொழிலாளர்கள் பயணிகளின் பயணச் சேவையை கருத்தில் கொண்டு, சுமார்,12-மணி நேரம் இரவு,பகலாக, கண் விழித்து பயணிகளை ஏற்றி இறக்கியும்,பயணச்சேவையை சிறப்பாக செய்தும், அரசின் மகளிர் இலவச பயண சேவை உள்ளிட்டு பல் வேறு நலத்திட்டங்களை செயல் படுத்தி அரசுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.இவர்களுக்கு. தீபாவளி பண்டிகை வருவதற்கு ஒரு மாதம் முன்னதாக,போனஸ் வழங்கப்பட வேண்டும். அதற்கு முன்னதாக அனைத்து தொழிற் சங்கங்களையும் அழைத்து பேசி, சமூக தீர்வு காணப்பட வேண்டும். சமீப காலமாக தொழிற் சங்கங்களை அழைத்து பேசுவதில்லை,அரசு தன்னிச்சையாக போனஸ் அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.ஓட்டுநர், நடத்துனர், தொழில் நுட்பபணியாளர் உள்ளிட்டகாலி பணியிடங்கள் நிரப்பப் படாமல்,கூடுதலான வேலைப் பளுவை சுமந்து. கொண்டு,மனஉளைச்சலுடன் பணி.புரிந்து வரும் தற்போதைய சூழ்நிலையில்,தொழிலாளர்கள் உற்சாகத்துடன் பணி புரியவும், விழா பண்டிகை காலங்களில்,சிறப்பு இயக்கங்களில் பணிபுரிய ஊக்கப்படுத்தும் வகையில், குறைந்த பட்ச சம்பளம் சட்டத்தின் படிகணக்கிட்டு, 2023-2024-ஆ ம் ஆண்டுக்குரிய போனஸ் மற்றும்
கருணைத் தொகை 25% வழங்க வேண்டும்.போனஸ் சட்டத்தின் படிகுறைந்த பட்சம், 3 0-நாட்கள் பணிபுரித்தால் அவர்களுக்கும் போனஸ்,கருணைத் தொகை வழங்க வேண்டும்.போக்கு வரத்து கழகங்களின் செயல்பாட்டிற்கு சொற்ப வருமானத்தில்,உ று துணையாக அடி மட்டத்தில் பணிபுரியும் பணி மனைகளில் பேருந்துகளை சுத்தம் செய்பவர்கள், உணவகப் பணியாளர்கள், பேருந்து நிலையங்களில் பயணிக்களை கூவி அழைப்பவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த ஆண்டு போனஸ் அறிவித்து, திராவிடமாடல் அரசின் முன்னுதாரணமாக அமைய வேண்டும். கடந்த ஆண்டுகளில் போனஸ் நிலுவைத்தொகை உள்ளதையும்,சேர்த்து இந்த ஆண்டு வழங்க வேண்டும். அதற்கு முன்னதாக தமிழ் நாடு அரசும்,கழக நிர்வாகங்களும் ஏ ஐ டி யூ சி உள்ளிட்ட அனைத்து பேரவை தொழிற் சகங்களையும் அழைத்து பேசி, சுமூகதீர்வு காண வேண்டும்என்று தமிழ்நாடு அரசுக்கு ஏஐடியூசி வேண்டுகோள் விடுக்கிறது என்று போதுச் செயலாளர் ஆர்.ஆறுமுகம், மாநில துணைத்தலைவர் துரை.மதிவாணன் இருவரும்தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 25% போனஸ் வழங்க வேண்டும்.! ஏ. ஐ டி யூ சி தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்.






