அதி­முக பொறுப்­பு­க­ளில் இருந்து தள­வாய் சுந்­த­ரம் நீக்­கம்-­எ­டப்­பாடி அதி­ரடி

சென்னை:, அக.9 கன்னி­யா­கு­மரி கிழக்கு மாவட்­டச்செய­லா­ளர், அதி­முக அமைப்­புச் செய­லா­ளர் உள்­ளிட்ட பொறுப்­பு­க­ளில் இருந்து தள­வாய் சுந்­த­ரம் தற்­கா­லி­க­மாக நீக்­கப்­பட்­டுள்­ளார். இதற்­கான உத்­த­ரவை கட்­சி­யின் பொதுச்செய­லா­ளர் எடப்­பாடி பழ­னி­சாமி பிறப்­பித்­துள்­ளார். இது­கு­றித்து எடப்பாடி பழ­னி­சாமி தனது அறிக்­கை­யில் கூறி­யி­ருப்­பதா­வது கட்­சி­யின்கோட்­பா­டு­கள், சட்­டத்திட்­டங்­க­ளுக்கு முர­ணாக செயல்­பட்­டதால் தள­வாய் சுந்­த­ரம்,அதி­முக அமைப்­புச்செய­லா­ளர், கன்­னி­யா­கு­மரி மாவட்­டச் செய­லா­ளர் உள்­ளிட்டபொறுப்­பு­க­ளில் இருந்து நீக்­கப்­ப­டு­கி­றார் என அறி­விக்­கப்பட்­டுள்­ளது. கடந்த இரு தினங்­களுக்கு முன்பு கன்­னி­யா­கு­ம­ரி­யில் ஆர்­எஸ்­எஸ் பேர­ணியை தள­வாய்சுந்­த­ரம் தொடங்கிவைத்­ததால் இந்த நடவ­டிக்கை எடுத்­தி­ருக்­கலாம் என அர­சி­யல் நிபு­ணர்­கள் தெரி­விக்­கி­றார்­கள் .மறைந்த முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லி­தா­வால், டெல்­லி­யின் தமி­ழக பிர­தி­நி­தி­யாக பொறுப்பு வகித்­தவர் தள­வாய்சுந்­த­ரம்.தொடர்ந்து 20 ஆண்­டு­க­ளாக சிறப்­பாக செயல்­பட்டு வரு­கி­றார்.அதி­மு­க­வுக்கு இரட்டை இலை சின்னத்தை வாங்­கிக் கொடுக்க முக்­கிய கார­ணி­யாக இருந்­தவ­ரும் தள­வாய்சுந்­த­ரமே.எடப்­பாடி பழ­னி­சா­மி­யின் இந்த அதி­ரடி உத்த­ர­வால் மூத்த நிர்­வா­கி­கள் கலங்­கி­யுள்­ள­னர்.ஆர்­எஸ்­எஸ், பாஜ­க­வு­டன் தள­வாய் சுந்­த­ரம் நெருக்­கம் காட்டி வரு­கி­றார் என்­பதை காட்­டி­லும் அவர்­கள் ­தான் இவ­ரு­டன் தேடி வந்து நெருக்­கம் காட்­டு­வதாக நிர்­வா­கி­கள்  உள்­ளூர் தெரி­விக்­கி­றார்­கள்.