அப்போபேரல மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ரஜினிகாந்த்! நள்ளிரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்!!

சென்னை, அக்.4 சென்னை அப்­போலோ மருத்துவ­ம­னை­யில்
இருந்து நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்பினார்.
தமிழ் சினி­மாவின் சூப்­பர் ஸ்டார் ரஜினிகாந்த்(73), தற்­போது ‘கூலி’
படத்தில் நடித்து வருகி­றார். இதற்­காக விசாகப்­பட்­டினத்தில் நடந்து வரும்படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினி, கடந்த சில நாட்­க­ளுக்கு முன்பு­தான் சென்னை திரும்பினார். இந்­நிலை­யில் செப்.30
ம் தேதி நள்­ளி­ரவு உடல்­ந­லக் குறை­வால் சென்னை அப்­போலோ மருத்துவ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளார். அடி­வயிறு பகுதியில் ஏற்­பட்ட வீக்­கம் கார­ண­மாக அவர்
மருத்துவ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டார் எனக்கூறப்­பட்­டது. தொடர்ந்து,இதயத்தில் இருந்து பிரி­
யும் இரத்த நாளத்தில் வீக்­கம் இருந்­த­தால் TRANSCATHETER முறை­யில்
ஸ்டென்ட் பொருத்தி வீக்­கத்தை நிறுத்தியதாகவும்,ரஜினிகாந்­தின் உடல்­ நிலை தற்­போது சீராகவும்,
அவர் நல­மு­டன் இருப்­பதாகவும் என்று அப்­போலோ மருத்துவ­மனை
அறிவித்­தது. ரஜினிகாந்த் நேற்று டிஸ்­சார்ஜ் செய்­யப்­பட இருப்­ப­தாக தகவல் வெளியாகியன நிலை­யில், நடிகர் ரஜினிகாந்த் நேற்று நள்­ளிரவு டிஸ்­சார்ஜ் செய்­யப்­பட்­டார். சிகிச்சை முடிந்த நிலையில் நள்­ளி­
ரவு டிஸ்­சார்ஜ் செய்­யப்­பட்ட ரஜினிகாந்த் வீடு திரும்பினார்.
நான்கு நாட்­க­ளுக்கு பிறகு ரஜினிகாந்த் வீடுதிரும்பினார். இரண்டு வார காலத்துக்கு ஓய்­வெ
டுக்க மருத்துவர்­கள் அறிவு­றுத்தி இருப்­ப­தாகவும்,அதன்­படி வீட்­டி­லேயே ஓய்வு எடுக்க இருப்­ப­தாக­வும் தகவல் வெளியாகி­யுள்­ளது.