நெல்­லையப்­பர் கோவில் மரத் தேருக்கு 100 கிலோ வெள்ளிக் கட்­டி­கள்! அமைச்­சர் சேகர்­பாபு வழங்கி பணிகளை தொடங்கினார்!!

சென்னை, செப். 28அற­நி­லை­யத்துறை அமைச்­சர் பி.கே.சேகர்­பாபு இன்று ஆணை­யர் அலுவல­கத்தில், திரு­நெல்­வேலிநெல்­லை­யப்­பர் கோயி­லுக்கு புதியவெள்ளித்­தேர் செய்திட 100 கிலோ வெள்­ளிக் கட்­டிகளை வழங்கி, வெள்ளித்­த­கடு வேயும் பணி­களை தொடங்கி வைத்­தார்.பின்­னர், செய்தியா­ளர்­களி­டம் தெரிவித்­த­தாவது:–திரு­நெல்­வேலி, நெல்­லை­யப்­பர் திருக்­கோ­யிலில் ஏற்­க­னவே பயன்­பாட்­டில் இருந்த வெள்ளித்­தேர் 1991ஆம் ஆண்டு தீ விபத்தில் எரிந்து விட்­டது. இந்த ஆட்சி ஏற்­பட்ட பிறகு முத­ல­மைச்­சர் புதிய வெள்ளித் தேர் உரு­வாக்குகின்ற பணியை உடன­டியாக தொடங்­கிடவேண்டும் என்று உத்­த­ரவிட்டதை தொடர்ந்து, சுமார் 33ஆண்டுகளுக்குப் பின் புதிய வெள்ளித்­தேர் உருவாக்கிட பணிகள் தொடங்­கப்­பட்டு மரத்­தேர் பணிகள் நிறைவுற்றுள்­ளது.இந்த மரத்­தே­ருக்கு வெள்ளி தகடு வேயும் பணிக்கு சுமார் 450 கிலோ அள­விற்கு வெள்ளி தேவைப்ப­டுகின்­றது .திருக்­கோ­யிலில் ஒன்­பது கிலோ வெள்ளி நன்­கொ­டையா­ளர்­க­ளால் வழங்­கப்­பட்டுள்­ளது. இன்­றைய தினம் நன்­கொ­டை­யா­ளர்­கள் எஸ்.ராஜ­ரத்தி­னம், ஆர்.சபா­பதி ஆகியோர் 100கிலோ வெள்ளிக்­கட்­டியை நன்­கொ­டையாக வழங்­கி­யுள்­ள­னர். இதன் மதிப்பு ஒரு கோடியே 2 லட்­சம் ஆகும்.அடுத்­தாண்டு ஜுலை மாதத்­திற்­குள் புதிய வெள்ளித்­தேரை பக்­தர்­கள் பயன்­பாட்டிற்கு கொண்டு வரநட­வடிக்­கைகள் மேற்கொள்­ளப்­ப­டும்.இந்து சமய அற­நிலையத்­துறை கட்­டுப்­பாட்டிலுள்ள திருக்­கோ­யில்­க­ளில் 68 தங்கத்­தேர்­க­ளும், 55 வெள்ளித்­தேர்­க­ளும் உள்­ளன. இந்த அரசு பொறுப்­பேற்ற பின்ரூ.29 கோடி மதிப்­பீட்­டில் 5புதிய தங்­கத்­தேர்­க­ளும்,ரூ.27.16 கோடி மதிப்­பீட்டில் 9 புதிய வெள்ளித்­தேர்களும் உருவாக்­கப்­பட்டு வருகின்­றன. அதில் பெரிய­பாளையம் தங்­கத்­தேர் மற்­றும் திருத்­தணி வெள்ளித்­தேர் பக்­தர்கள் பயன்­பாட்­டிற்குகொண்டு வரப்­பட்­டுள்­ளன.மேலும், 11 ஆண்டுக­ளாக ஓடாமலிருந்த ராமே­சுவரம் தங்­கத்­தேர், 10 ஆண்டுக­ளாக ஓடாமலிருந்த சமயபு­ரம் தங்­கத்­தேர், 9 ஆண்டுக­ளாக ஓடாமலிருந்த சேலம் கோட்டை மாரியம்­மன் தங்கத்­தேர், 5 ஆண்டுக­ளாக ஓடாமலிருந்த திருத்­தணி தங்­கத்­தேர் போன்­ற­வற்றை ஓட்டி காட்­டியுள்­ளோம்.150 ஆண்டுகளுக்கு பின் பூவரசங்­குப்­பம், லட்­சுமி நர­சிம்ம சுவாமி திருக்­கோ­யில் திருத்­தேர், 87 ஆண்டுக­ளுக்கு பின் சிந்­தா­திரிப்­பேட்டை ஆதிகேசவ பெருமாள் திருக்­கோயில் திருத்­தேர், 80 ஆண்டு­களுக்கு பின் சீட்­டணஞ்­சேரி,காளீஸ்­வ­ரர் திருக்­கோ­யில் திருத்­தேர் போன்ற திருத்­தேர்­கள் ஓட்டி பயன்­பாட்டிற்கு கொண்டு வந்து சாதனை படைத்துள்­ளோம். மரு­த­மலை சுப்­பிரமணிய சுவாமி திருக்­கோ­யிலுக்கு விடுமுறை நாட்­க­ளில் வாக­னங்­கள் அதிக­ள­வில் வருவ­தால் பக்­தர்­க­ளின் சிரமத்தை போக்கும் வகை­யிலும், போக்கு வரத்து நெரிசலை கட்­டுப்­ப­டுத்தும் வகை­யி­லும் இ-பாஸ் நடை­மு­றை­யினை செயல்­ப­டுத்துவது குறித்து திருக்­கோ­யில் நிர்­வாகம், காவல் துறையி­னர் அறி­வித்துள்­ள­னர். முழு ஆய்­விற்கு பிறகு இ-பாஸ் தேவை­யில்லை என்று கரு­தப்­பட்­டால் அது ரத்து செய்­யவும் தயாராக இருக்கி­றோம். பக்­தர்­க­ளின் சிரமத்தை போக்குவ­தற்­காக இத்­த­கைய திட்­டத்தை செயல்­ப­டுத்து    வ­தற்கு ஆலோ­சித்துக்கொண்டிருக்­கின்­றோம்.இந்து சமய அற­நி­லை­யத்­துறை கட்­டுப்­பாட்­டிலுள்ள11 திருக்­கோ­யில்­க­ளில் நாள் முழுவதும் அன்­ன­தா­னமும் , 7 6 3 திருக்­கோ­யில்­க­ளில் ஒரு வேளை அன்­ன­தா­ன­மும், 17திருக்­கோ­யில்­ க­ளில் நாள் மு­ழுவதும் பிரசா­த­மும் வழங்கப்­பட்டு வருகி­றது.அன்­ன­தா­னத் திட்­டத்தின் மூலம் நாளொன்றுக்கு 92 ஆயிலம் பக்­தர்­கள் பயன்­ பெற்று வருகின்­ற­னர். இதற்காக ஆண்டு ஒன்றிற்குரூ.110 கோடி செலவி­டப்­படுகி­றது.இவ்­வாறு அதில் கூறப்பட்டுள்­ளது. இந்நிகழ்ச்சியில் அறநி­லையங்­கள் துறை முதன்­மைச் செயலா­ளர் பி.சந்­த­ர­மோ­கன், இந்து சமய அற­நி­லை­யத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடு­தல் ஆணை­யர்­கள் டாக்­டர். இரா.சுகுமார், ந.திருமகள்,சி.ஹரிப்­ரியா, வெள்ளி நன்­கொ­டை­யா­ளர் ஆர்.சபா­பதி, இணை ஆணை­யர்­கள் பொ.ஜெயராமன், கோ.செ.மங்­கை­யர்க்­க­ரசி, ரா.வான்­மதி எம்.அன்பு மணி,துணை ஆணை­யர் அ.ஜான்சிராணி மற்­றும் அலுவலர்­கள் கலந்­துக் கொண்­ட­னர்.