உடல் உறுப்பு தானம் செய்ய முதலமைச்சர் பதிவு- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

சென்னை, செப் 25சென்னை, கலைவா­ணர் அரங்­கத்தில் உறுப்பு தான தின நிகழ்ச்சி நடந்­தது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்­கள் நல்­வாழ்வுத்துறை அமைச்­சர் மா.சுப்பிரமணியன், இந்­து­ச­மய அற­நி­லை­யத்துறை அமைச்­சர் சேகர்­பாபு ஆகி­யோர் பங்­கேற்று, உடல் உறுப்பு மாற்று விழிப்பு­ணர்வு கையேடு மற்­றும் “மறுபி­றவி” என்றஉடல் உறுப்பு தானவிழிப்புணர்வு குறுந்­த கட்டினை வெளியிட்­டனர்.
இந்த நிகழ்ச்சியில், உறுப்பு கொடை­யாளர் குடும்­பத்தி­ன­ருக்கு சிறப்பு செய்து, உறுப்பு மாற்று சிகிச்­சை­யில் சிறப்­பாகபணியாற்­றிய டாக்­டர்­க­ளுக்கு விருதுகள் வழங்­கப்­பட்­டன. பின்­னர் அமைச்­சர் மா.சுப்பிரமணியன் நிரு­பர்­க­ளிடம் கூறிய­தாவது:உறுப்பு மாற்று சிகிச்சை திட்­டம் தொடங்­கப்­பட்­ட­தில் இருந்து தற்­போது வரை 1998 உறுப்புக் கொடை­யாளர்­கள் உரு­வாகி இருக்கி­றார்­கள். இருதய மாற்று அறுவைசிகிச்­சைக்கு கொடையாளர்­க­ளின் மூலம் பெறப்­பட்ட இதயம் 892, நுரை­யீரல் 912, கல்லீரல் 1,794, சிறுநீர­கம் 3,544, கணை­யம் 42. சிறுகுடல் 15, வயிறு 1, கைகள் 7 என7,207 முக்கிய உறுப்பு­கள் பயன்­பாடு பெற்றி­ருக்கி­றது. முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் பொறுப்­பேற்ற பிறகு 2021 முதல் தற்­போது வரை 585 பேர் உடலு­றுப்பு தானம் செய்தி­ருக்கி­றார்­கள். சென்னை­யில் உள்ள மியாட் ஆஸ்­பத்திரியில், முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் உடல் உறுப்புதா­னம் செய்யபதிவு செய்து உள்­ளார். உடலுறுப்பு கொடையாளர்­க­ளின் எண்­ணிக்கை பெருகிவரும் சூழ்நி­லையில் தொடர்ச்சியாக கடந்த8 ஆண்டுகளாக தமிழ்­நாடு தொடர்ந்து முதலி­டம் பெற்று வருகி­றது. சிறுநீரகம் வேண்டி காத்திருப்­ப­வர் 7.106 பேர், கல்லீரல் வேண்டி காத்திருப்­ப­வர் எண்­ணிக்கை 416 பேர். இத­யத்திற்­காக 83 பேர், நுரை­யீரல் வேண்டி காத்திருப்­ப­வர் 54 பேர், இதயம் மற்றும் நுரை­யீரல் வேண்டி காத்திருப்­ப­வர் 24 பேர். கணை­யம், கைகள், சிறுகுடல், வயிறு, சிறுநீரகம், இத­யம் என 7,797 பேர் உடலுறுப்பு­வேண்டி காத்திருப்­ப­வர்­க­ளாக உள்­ள­னர்.இவர்­க­ளுக்கு விடி­யல் என்­னும் இணை­ய­தளம் தொடங்கி அதன்மூ­ல ம் ஒவ்­வொ­ருவருக்கும் அவர்­கள் பதிவு செய்தி­ருக்கும் காலத்தினை பொறுத்து, உடலுறுப்­புகள் தொடர்ந்து வழங்கப்­பட்டு வருகி­றது.தற்­போது 2,286 ஆரம்ப சுகாதார நிலை­யங்­க­ளிலும் பாம்புக்­கடி மருந்­துகளும், நாய்க்­கடி மருந்­துக­ளும் கையிருப்பில் உள்­ளது. அ.தி.மு.க. ஆட்­சியில் கையிருப்பு இருந்­ததா? என்­பதை எடப்­பாடி பழனி­சாமி தெரிந்து கொண்டு பேசவேண்டும். டெங்கு என்­ப­து­ பெ­ரிய அள­வில் கட்டுக்குள் உள்­ளது.இவ்­வாறு அவர் கூறி­னார்.இந்த நிகழ்வில், மருத்துவம் மற்றும் மக்­கள் நல்­வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலை­மைச் செய­லாளர் சுப்­ரியா சாகு, மருத்துவம் மற்றும் ஊரக நலப்­பணிகள் இயக்கு­னர் ராஜ­மூர்த்தி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கு­னர் சங்­குமணி, தமிழ்­நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பி­னர் செய­லாளர் கோபால­கி­ருஷ்­ணன் உள்­பட பலர் கலந்து கொண்­ட­னர்.