கோர்ட் உத்தரவை நிறைவேற்றாததற்கு தேர்தல் பணிகளை காரணமாக கூறுவதா ? அரசு அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கண்டிப்பு சென்னை : ‘ நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருந்ததற்கு , தேர்தல் பணிகளை காரணமாகக் கூறக்கூடாது’ என , அரசு அதிகாரிகளுக்கு , சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது . தமிழகத்தில் , கடந்த இரண்டாயிரத்து ஏழு ஆம் ஆண்டு துணை தாசில்தார் பதவி உயர்வுக்கான பட்டியலில் சேர்த்த தன் பெயரை , கடந்த இரண்டாயிரத்து ஆறு ஆம் ஆண்டு பட்டியலில் சேர்க்கக் கோரி , வருவாய் துறையில் பணியாற்றிய ராஜாகுமார் என்பவர் , சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் , ‘ பன்னிரண்டு வாரங்களில் இரண்டாயிரத்து ஆறு ஆம் ஆண்டு பட்டியலில் , ராஜாகுமார் பெயரை சேர்க்க வேண்டும் . உரிய பணப்பலன்களை வழங்க வேண்டும்’ என , கடந்த மார்ச்சில் உத்தரவிட்டது . இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி , ராஜாகுமார் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு , தலைமை நீதிபதி எம் . எம் . ஸ்ரீவஸ்தவா , நீதிபதி ஜி . அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் , நேற்று விசாரணைக்கு வந்தது…