கஞ்சா வியாபாரிகள் மூவர் கைது ஒன்றே கால் கிலோ கஞ்சா பறிமுதல்

 

அண்ணாமலை நகர் காவல் நிலையம்.
கஞ்சா வியாபாரிகள் மூவர் கைது ஒன்றே கால் கிலோ கஞ்சா பறிமுதல்

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனையும் கஞ்சா கடத்தலையும் தடுக்கும் பொருட்டு தீவிர தேடுதல் வேட்டையில் மாவட்ட காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை 10 மணி அளவில் அண்ணாமலை நகர் சிவபுரி சாலை சுடுகாடு அருகே சுமார் 1 1/4 கிலோ கஞ்சா பொட்டலங்களுடம் கல்லூரி மாணவரிடம் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த கஞ்சா வியாபாரிகளான 1)பசுபதி வயது 24 த.பெ .பலராமன் மண் ரோடு 2)லாரன்ஸ் வயது 21 த/பெ ராமச்சந்திரன் ஜம்பு குளம் 3)அஜய் வயது 19 த/பெ. விஜயகுமார் செங்கட்டான் தெரு, சிதம்பரம் ஆகியோரை காவல் ஆய்வாளர் அம்பேத்கர் உதவி ஆய்வாளர்கள். பாஸ்கர்,கஜேந்திரன், காவலர்கள் மணிகண்டன் ஐயப்பன் ஸ்ரீதர் ஆகியோர் சகிதம் சுற்றி வளைத்து கைது செய்தனர்.