தூத்துக்குடி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கும், மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகையை கனிமொழி கருணாநிதி எம்பி, தூத்துக்குடி கலெக்டர் க.இளம்பகவத் , ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் எம்எல்ஏ, ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் குறிப்பன் குளத்தில் உள்ளபட்டாசு ஆலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ந்தேதி வெடி விபத்து ஏற்பட்டது . இதில், அரசர்குளத்தை சேர்ந்த முத்துகண்ணன்(வயது21),விஜய் (25)ஆகியோர் நிகழ்விடத்திலேயே பலியாகினார்.ஸ்ரீவைகுண்டம் தாலுகா புளியங்குளத்தை சேர்ந்த செல்வம்(26),ஆழ்வார்திருநகரி அருகே உள்ள செம்பூரை சேர்ந்த சுந்தரம் மகன் ஐசக் பிரசாந்த்(26),சின்னமதிகூடலை சேர்ந்த செந்தூர்கனி, முத்துமாரி ஆகியோர் படுகாயமடைந்தனர்.இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தஐசக் பிரசாந்த், செல்வம் ஆகியோர் சிகிச்சைக்காக நெல்லை அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செல்வமும், ஐசக் பிரசாந்தும் சிகிச்சைபலனின்றி பலியாகினர்.இந்நிலையில் வெடிவிபத்தில் பலியானவர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாயும் காயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும் இழப்பீடாக வழங்கத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனையடுத்து,தூத்துக்குடி மாவட்டம் – ஆழ்வார்திருநகரி பேரூராட்சி அலுவலகத்தில் ,12/09/2024 அன்று நடைபெற்ற நிவாரண உதவி வழங்கும் நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி வெடி விபத்தில் மரண மடைந்த நபர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாயும், காயம் அடைந்த இரண்டு நபர்களுக்குத் தல ஒரு லட்சரூபாயும், கடந்த மாதம் 5ஆம் தேதி செம்பூரில் இடி மின்னல் தாக்கி பலியான வீரமுத்து மதன் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாயும் இழப்பீடாக திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி, தூத்துக்குடிமாவட்ட ஆட்சியர் க.இ ள ம்ப க வ த்முன்னிலையில் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி,ஏரல் வட்டாட்சியர் கோபால்,திருவைகுண்டம் வட்டாட்சியர் ரத்னா சங்கர்,ஆழ்வார் திருநகரி பேரூராட்சி தலைவர் சாரதா பொன்இசக்கி,பேரூராட்சி செயல் அலுவலர்மகாராஜன், ஆழ்வை திமுக செயலாளர் கோபிநாத் மற்றும் துறை சார்ந்தஅலுவலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
வெடி விபத்து மற்றும் மின்னல் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண நிதி கனிமொழி எம்பி வழங்கினார






