செங்கல்பட்டு, செப். 13– செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செங்கல்பட்டு, சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் மண்டல அளவிலான செயற்குழுகூட்டம் நடைபெற்றது.அக்டோபர்2–ஆம்தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெற உள்ள மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ள நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடை பெற்றது. இதில் அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் பெண்கள் ஆண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.முன்னதாக நேற்று உயிரிழந்த மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரிக்கு விசிக நிர்வாகிகள் சார்பில் மவுனஅஞ்சலி மற்றும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.தொடர்ந்து மேடையில் பேசிய திருமாவளவன் கூறியவது:– கட்டாயம்தா நாம் மதுக்கடைகளை மூட முடியும் என்ற நம்பிக்கையோடு இருக்க வேண்டும், வரும் தேர்தல் காழ்ப்புணர்ச்சிக்காக நாம் இதை செய்கின்றோம் என்று சீன் போடுவதாக சிலர் கூறுகிறார்கள். 2026 தேர்தலில் நமக்கு பின்னடைவு ஏற்படும்,என்ற நிலை ஏற்பட்டால் கட இந்த போராட்டம் நடத்துவதில் இருந்து ஒருபோதும் நாம் பின் வாங்கக்கூடாது. திமுக, அதிமுககட்சிக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் மிகப்பெரியகட்சியாக விசிகதான் உள்ளது. இந்த மது ஒழிப்பு போராட்டத்தை நடத்துவதன் மூலம் நமக்கு எந்த விளைவுகள் வந்தாலும் அந்த விளைவுகளை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும். இது போன்ற போராட்டங்களை நாம் முன்னெடுத்து நடத்துவதால் திமுக உடனான விசிக கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டு ெமனநினைக்கிறார்கள். தமிழ்நாட்டு அரசியலில் கூட்டணியில் இருந்து கொண்டே மக்கள் பிரச்சனைகளை துணிந்து பேசுகின்ற துணிச்சல் உள்ள இயக்கம் விசிக மட்டும் தான். தமிழ்நாட்டுக்கு நாம் விடுக்கின்ற ஒரே வேண்டுகோள் படிப்படியாகவாவதுஅரசு மதுபானகடைகளை மூடி வரலாற்றில்நல்ல பெயரை எடுத்து நிலையான வெற்றியை பெறுங்கள் என விசிக வாழ்த்துகிறது.திமுக மட்டும் வரும் தேர்தலுக்கு முன்பாக அரசு மதுபான கடைகளை முழுமையக மூடிவிட்டால் எத்தனை விஜய் வந்தாலும் திமுகவை அசைக்க முடியாது.திமுக வெற்றி பெற்றால் விசிகவுக்கு என்ன லாபம் என கேள்வியும் உண்டு.மதுபான கடைகளை மூடுவதால் விசிகவுக்கு வெற்றிதான். மதுபான கடைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி போராட்டதால் அரசு மூடியது என்றால்அடுத்தடுத்து வரும் தேர்தலில் விடுதலை சிறுத்தைகளைத்தான் மக்கள் வரவேற்பார்கள் அது தான்நமக்கு கிடைத்த வெற்றி.இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
தேர்தலுக்கு முன் மதுக்கடைகளை மட்டும் மூடிவிட்டால் எத்தனை விஜய் வந்தாலும் தி.மு.க.வை அசைக்க முடியாது! * மறைமலைநகர் கூட்டத்தில் தொல்.திருமாவளவன் பேச்சு; *‘‘வி.சி.க.வுக்கு எந்த விளைவு வந்தாலும் சந்திக்கத் தயார்!!






