மதுரை விமான நிலையத்தில் அக்.29 முதல் 24 மணி நேர சேவை தொடக்கம்!

மதுரை:வரும் அக். 29 முதல் 24 மணி நேர சேவையை மதுரை விமான நிலை­யம் தொடங்­கு­கி­றது என விமான நிலைய அதி­கா­ரிகள் தெரி­வித்­த­னர்.
மதுரை விமான நிலையத்­தில் இருந்துசிங்­கப்­பூர்,இலங்கை, துபாய் உள்ளிட்ட நாடு­க­ளுக்கு வெளிநாட்டு சேவை மற்­றும் சென்னை, மும்பை, பெங்க­ளூர், டெல்லி, ஹைதராபாத் நக­ரங்­க­ளுக்கு உள்நாட்டு விமான சேவை­யும் நடை­மு­றை­யில் உள்­ளது.இருப்­பி­னும்,இவ்­வி­மான நிலை­யத்தை சர்­வதேச விமான நிலை­ய­மாக மாற்றி, 24 மணி நேரசேவையை ஏற்­ப­டுத்த வேண்­டும் என வணி­கர்கள், வியா­பா­ரி­கள் சங்­கத்தி­னர், தொழில் வர்த்­தக சங்­கம் மற்­றும் அர­சி­யல்கட்­சி­யின் உள்­ளிட்ட பல்
வேறு தரப்­பி­லும் கோரிக்கை விடுத்­த­னர்.இந்த கோரிக்­கை­யின் அடிப்­படை­யில் அக்டோபர் இறு­திக்­குள் மதுரை விமான நிலை­யத்தை 24மணி நேர சேவை­யாக மாற்­றும் முயற்சி மேற் கொள்­ளப்­பட்­டுள்­ளது இதற்­காககூடு­தல்பணி­யாளர்,
தொழில் பாது­காப்பு படை­யி­னர் நிய­ம­னம் உள்ளிட்ட பல்­வேறு பணி­களும் நடப்­பதாக விமான நிலை­யம் தரப்­பில் தெரிவிக்­கப்­ப­டு­கி­றது.இது குறித்து மதுரை விமான நிலைய அதி­கா­ரிகள் கூறி­ய­தா­வது: “தற் போது மதுரை விமான நிலை­யம் காலை 7 முதல் இரவு 10 மணி வரை செயல்­ப­டு­கி­றது. 24 மணி
நேர சேவைக்கு கூடு­தல் ஆட்­கள் தேவை. இதற்காக, கூடு­தலாக மத்­திய தொழில்பாது­காப்புபடை
(சிஐ­எஸ்­எப்) வீரர்­கள்பணி அமர்த்­தப்­ப­டு­கின்­றனர்.இரவு நேர விமான சேவையை தொடங்­கும் சூழ­லில் பல் வேறு விமானங்­கள் வந்து செல்­லவேண்­டும்.இதற்­காக விமான
நிறு­வ­னங்­க­ளுக்­கும் ஆணை­யம் அழை ப்பு விடுக்­கப்­பட்டுள்­ளது.அக்.29 முதல் 24 மணிநேர சேவை ஆரம்­பிக்­கும் நிலை­யில், மது­ரை­யில் இருந்து பல்­வேறு நாடு­களுக்கு பய­ணிக்­கும் இரவு நேர பய­ணி­கள் திருச்சி,சென்னை விமான நிலையத்­திற்கு செல்­வது தவிர்க்கப்­ப­டும். தென் மாவட்ட மக்­க­ளுக்­கும் பய­னுள்­ளதாக இருக்­கும். விமானநிறு­வ­னங்­க­ளின் வருகையை பொறுத்து புறப்­படும் நேரத்­திற்­கான அட்­டவணை,இயக்­கம் குறித்த அறி­விப்­பும் வெளி­யாகும்”என்­ற­னர்